ரியல் மெட்ரிட் கால்பந்து கழகத்தின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக அவரது தரப்பால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஸ்பானிய சுப்பர் கிண்ண கால்பந்து தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த முதல் கட்டப் போட்டியில் ரியல் மெட்ரிட் அணி 3-1 என வெற்றிபெற்றது. குறித்த போட்டியின் 80 ஆவது நிமிடத்தில் ரொனால்டோ கோலடித்தார். அப்போது அவர் தனது ஜேர்சியைக் கழற்றி பார்சிலோனா ஆதரவாளர்கள் முன்னிலையில் தனது வெற்றியைக் கொண்டாடினார். எனினும் போட்டி விதிமுறைப்படி இந்த நடத்தை தவறு என்பதால் ரொனால்டோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதனையடுத்து சில நிமிடங்கள் கழித்து பார்சிலோனா கோல் பகுதிக்குள் சென்ற ரொனால்டோ பெனால்டி பெறும் வகையில் எதிரணி வீரரை தள்ளியமைக்காக கீழே விழுந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
எனவே 2ஆவது முறையாக ரொனால்டோவுக்கு போட்டி மத்தியஸ்தர் மஞ்சள் அட்டை காண்பித்தார். ஒரே போட்டியில் இரு மஞ்சள் அட்டைகள் பெற்றதால் உடனடியாக ரொனால்டோவுக்கு சிவப்பு அட்டை வழங்கினார். இதனால் ரொனால்டோவுக்கு களத்தில் இருந்து வெளியேற நேர்ந்தது.
இந்நிலையில் ரொனால்டோவுக்கும் மத்தியஸ்தருக்கும் இடையில் வாக்குவாதம் எற்பட்டது. கோபப்பட்ட ரொனால்டோ மைதானத்தில் இருந்து வெளியேறும் முன் மத்தியஸ்தரின் முதுகில் கைவைத்து தள்ளினார்.
இதனால் சிவப்பு அட்டை பெற்ற ரொனால்டோவுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடையும் நடுவரை தள்ளிவிட்டதற்கு 4 போட்டிகளில் விளையாடத் தடையும் என மொத்தம் 5 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்க ஸ்பானிய கால்பந்து சம்மேளனம் நடவடிக்கை எடுத்தது.
மேலும் அவருக்கு 4500 அமெரிக்க டொலர் அபராதமும் விதிக்கப்பட்டது. எனினும் அடுத்த 10 நாட்களுக்குள் இந்த தடையை எதிர்த்து ரொனால்டோ மேன்முறையீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
எனினும்இ இதை எதிர்த்து ரொனால்டோ சார்பில் செய்யப்பட்ட மேன்முறையீடு ஒரு சில மணி நேரங்களில் நிராகரிக்கப்பட்டது. இதனால் அவருக்கு ஸ்பானிய சுப்பர் கிண்ண கால்பந்து தொடரின் 2ஆவது கட்டப் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது. இருப்பினும் 2ஆவது கட்டப் போட்டியில் ரியல் மெட்ரிட் 2-0 என வெற்றி பெற்றது. இதன்படி ரியல் மெட்ரிட் அணி 5-1 என போட்டியை வென்று 10ஆவது தடவையாகவும் ஸ்பானிய சுப்பர் கிண்ணத்தைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM