திட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட கால் நடை பண்ணையாளர்கள் உரிய பிரிவு கால் நடை வைத்தியர் அல்லது கால் நடை அபிவிருத்தி போதனாசிரியரிடத்தில் பதிவு செய்யுமாறு மாகாண கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் வைத்தியர் எம்.ஏ.எம்.சுல்பிகார் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று வியாழக்கிழமை (11)வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது 2025 நவம்பர் மாதம் ஏற்பட்ட டித்வா அனர்த்த நிலமையினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண கால் நடை பண்ணையாளர்களுக்கு இலக்கம் 08/2025 வரவு செலவு திட்ட சுற்று நிரூபத்தின் பிரகாரம் நிதி நிவாரணம் வழங்குவதற்கான சேத விபரங்களை உறுதிப்படுத்தல் மற்றும் மதிப்பீடு செய்யும் பணிகள் கிழக்கு மாகாண கால் நடை சுகாதார திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச கால் நடை வைத்திய அதிகாரி அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள திட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து கால் நடை பண்ணையாளர்களுக்கும் இது பொருந்தும்.
இதன் போது ஏற்பட்ட கால் நடை பண்ணை, கட்டிடங்கள் ,ஊபகரணங்கள் போன்ற சேத விபரங்களுடன் பதிவுகளை மேற்கொள்ளவும்
குறித்த விபரங்களை இம் மாதம் 2025.12.15 ம் திகதிக்கு முன்னர் அருகில் உள்ள அரச கால் நடை வைத்திய அதிகாரி அல்லது கால் நடை அபிவிருத்தி போதனாசிரியரிடத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறும் மேலதிக விபரங்களுக்கு பின்வரும் மாவட்ட பிரதி பணிப்பாளர்களை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM