(நா.தனுஜா)
வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்படைந்த கிணறுகளை சுத்திகரிப்பதற்கும், பாதுகாப்பான தூய குடிநீரின் கிடைப்பனவை உறுதிசெய்வதற்கும் உதவும் வகையில் 30 க்கும் மேற்பட்ட நீர் இறைக்கும் குழாய் தொகுதிகள் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தினால் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், தனியார் நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பல வழிகளிலும் இலங்கைக்கு உதவிகளை வழங்கிவருகின்றன்ர.
அதற்கமைய வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்படைந்த கிணறுகளை சுத்திகரிப்பதற்கும், பாதுகாப்பான தூய குடிநீரின் கிடைப்பனவை உறுதிசெய்வதற்கும் உதவும் வகையில் 30 க்கும் மேற்பட்ட நீர் இறைக்கும் குழாய் தொகுதிகள் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசூஸா குபோட்டாவினால் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்த உதவி நீரின் மூலம் பரவக்கூடிய நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கும், தூய குடிநீரின் கிடைப்பனவு மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நலன் என்பவற்றை உறுதிசெய்வதற்கும் பங்களிப்புச்செய்யும் என ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் மீண்டெழும் தன்மையையும், தயார்நிலையையும் வலுப்படுத்துவதை முன்னிறுத்தி நாட்டின் தேசிய கட்டமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் அத்திட்டம் தெரிவித்துள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM