(நா.தனுஜா)
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் தாம் தொடர்ந்து உடன்நிற்கப்போவதாகவும், இவ்வாறான நெருக்கடிநிலையின்போது கருணை மிகுந்த ஒவ்வொரு செயலும் பாதிக்கப்பட்டோர் மத்தியில் பெரும் நம்பிக்கையை விதைக்கும் எனவும் செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கங்களின் சர்வதேச பேரவையின் ஆசிய, பசுபிக் பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.
'தித்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், தனியார் நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பல வழிகளிலும் இலங்கைக்கு உதவிகளை வழங்கிவருகின்றனர்.
அந்தவகையில் பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கம், கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் மற்றும் ஏனைய மனிதாபிமானப் பங்காளிகள் ஊடாக உடனடி நிவாரண உதவிகள் சென்றடையும் வகையில் முதற்கட்டமாக 890,000 டொலர் நிதியுதவியை வழங்கிய பிரித்தானியா, அதனைத்தொடர்ந்து மேலும் 430,000 டொலர் நிதியை வழங்கியது.
அந்த நிதியுதவியின் ஊடாக செஞ்சிலுவை சங்கம் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு அவசியமான உதவிகளை வழங்கிவரும் நிலையில், நேற்று முன்தினம் (9) கம்பஹா மாவட்ட மக்களுக்கான நிவாரண உதவி வழங்கல் நடவடிக்கைகளில் செஞ்சிலுவை சங்கத்துடன் இலங்கைக்கான பிரித்தானிய பதில் உயர்ஸ்தானிகர் தெரெஸா மஹோனியும் இணைந்துகொண்டார்.
அத்தோடு செஞ்சிலுவை சங்கத்தின் கம்பஹா கிளையின் ஊடாக பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசியமான சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில் பியகமவில் நடாத்தப்பட்டுவரும் மருத்துவ முகாமையும் பதில் உயர்ஸ்தானிகர் பார்வையிட்டார்.
இவ்வாறானதொரு பின்னணியில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் தாம் தொடர்ந்து உடன்நிற்கப்போவதாகவும், இவ்வாறான நெருக்கடிநிலையின்போது கருணை மிகுந்த ஒவ்வொரு செயலும் பாதிக்கப்பட்டோர் மத்தியில் பெரும் நம்பிக்கையை விதைக்கும் எனவும் செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கங்களின் சர்வதேச பேரவையின் ஆசிய, பசுபிக் பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM