சீனாவில் இலஞ்ச மோசடியில் ஈடுபட்டவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது! 

10 Dec, 2025 | 02:01 PM
image

சீனாவில் இலஞ்சம் வாங்கியது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கமைய, அரசு நிதி நிறுவனத்தின் முன்னாள் மேலாளர் ஒருவருக்கு நேற்று (9) காலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

சீனா ஹுவாரோங் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸின் (CHIH) முன்னாள் பொது மேலாளர் பாய் தியான்ஹுய் 2014 மற்றும் 2018க்கு இடையில் பல திட்டங்களை செயற்படுத்தவும் அதற்கு நிதி அளிப்பதற்கும் அவர் பெருமளவில் இலஞ்சம் பெற்றதாக அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அவர் 156 மில்லியன் டொலர்களுக்கு மேல் இலஞ்சம் வாங்கிய குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.

இந்த வழக்கில், தியான்ஜினில் உள்ள நீதிமன்றம் கடந்த மே மாதம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டபோதும் உச்சநீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது. 

இந்நிலையில் நேற்று காலை பாய் தியான்ஹுய், குடும்ப உறுப்பினர்களை கடைசியாக சந்தித்த பிறகு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான், சிரியாவில் தொடரும் வன்முறைகள், உயிரிழப்புகள்!...

2026-01-12 17:33:48
news-image

இந்தியாவில் ஒற்றை யானை அட்டகாசம்; 09...

2026-01-12 16:53:44
news-image

இந்தோனேசியாவில் க்ரொக் செயற்கை நுண்ணறிவுக்குத் தடை 

2026-01-12 16:11:11
news-image

ஜேர்மனி பிரதமருடன் இணைந்து பட்டம் விட்டு...

2026-01-12 17:25:57
news-image

“நாங்கள் என்ன செய்யவேண்டும் என யாரும்...

2026-01-12 15:50:48
news-image

ஈக்வடோரில் கொடூரமாக 5 கொலைகள் -...

2026-01-12 13:23:50
news-image

வெனிசுவெலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்! -...

2026-01-12 12:47:46
news-image

அவுஸ்திரேலியா அமுல்படுத்திய சமூக ஊடக தடை...

2026-01-12 11:37:47
news-image

ஈரான் போராட்டம் தீவிரம்: 500க்கும் மேற்பட்டோர்...

2026-01-12 10:55:01
news-image

இன்ஸ்டாகிராம் தரவுகள் கசிந்ததாகக் கூறப்படும் தகவலை...

2026-01-12 09:43:09
news-image

வெனிசுவேலாவை விட்டு உடனே வெளியேறவும்: அமெரிக்க...

2026-01-11 15:26:31
news-image

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் சிக்கி...

2026-01-11 15:19:56