(இராஜதுரை ஹஷான்)
இலங்கை மிக மோசமான இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ள போவதாக வளிமண்டவியல் திணைக்களம் முன்கூட்டியதாக அறிவித்தும் அரசாங்கம் அதனை அலட்சியம் செய்துள்ளது என்று முன்வைக்கும் குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய விசேட தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும். அக்குழுவின் தலைமைத்துவத்தை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என்று ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
ஐக்கிய குடியரசு முன்னணியின் காரியாலத்தில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடன் நிவாரணம் வழங்குவதாக ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு நடைமுறையில் சாத்தியமாக்கப்பட வேண்டும். மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவிரைவில் வழமைக்குத் திரும்பினால் தான் பொருளாதார மீட்சிக்குரிய திட்டங்களை சிறந்த முறையில் செயற்படுத்த முடியும்.
அழிவினால் ஏற்பட்ட இழப்புக்களை அரசாங்கம் முறையாக மதிப்பீடு செய்ய வேண்டும். அப்போது தான் திட்டங்களை சிறந்த முறையில் வகுக்க முடியும்.
இலங்கை மிக மோசமான இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ள போவதாக வளிமண்டவியல் திணைக்களம் முன்கூட்டியதாக அறிவித்தும் அரசாங்கம் அதனை அலட்சியம் செய்துள்ளது என்று முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை முறையாக ஆராய வேண்டும்.
வளிமண்டளவியல் திணைக்களம் இந்த அனர்த்தம் பற்றி முன்னெச்சரிக்கை விடுத்தததாக எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். அவ்வாறு எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புக்களும் கிடைக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிடுகிறார்.அவ்வாறாயின் இதன் உண்மைத்தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.
பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைத்து இதனை விசாரணை செய்ய வேண்டும்.இந்த தெரிவுக்குழுவின் தலைமைத்துவத்தை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM