நிவாரணம் வழங்குவதில் அரசியல் அழுத்தம் - கிராம உத்தியோகத்தர்கள் விசனம்

09 Dec, 2025 | 05:07 PM
image

(செ.சுபதர்ஷனி)

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள  மக்களுக்கான நிவாரணம் வழங்கும் செயற்பாட்டில் அரசியல் தலையீடுகளினால் கிராம உத்தியோகத்தர்களால்  சுயாதீனமாக செயற்பட முடியாத நிலை உருவாகியுள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் இவ்வாறான அரசியல் அச்சுறுத்தல்கள் தொடர்வதால் நாடளாவிய  ரீதியில் உள்ள கிராம உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் கொழும்பில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில்  ஏற்பட்ட அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணப் பொருட்களை  வழங்குதல் மற்றும் பாதுகாப்பு முகாம்களை  நடத்தி வரும் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக கிராம உத்தியோகத்தர்கள் மீது அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. நிவாரணப் பணி மற்றும் பாதுகாப்பு முகாம்களை நடத்திவருவதில் அரசியல் தலையீட்டால்  இடையூறு ஏற்பட்டுள்ளதுடன், கிராம உத்தியோகத்தர்கள் சுயாதீனமாக செயற்பட முடியாத இக்கட்டான நிலை உருவாகியுள்ளது.  

கடந்த அரசாங்கங்களுடன் ஒப்பிடும் போது தற்போதைய அரசாங்கம் நிவாரணம் வழங்குதல், நிவாரண வழங்கும் செயற்பாடுகளையும் துரிதப்படுத்தியுள்ளது. எனினும் உரிய தரப்பினரிடம்  நிவாரணங்களை கொண்டு சேர்க்கும் செயற்பாட்டில் கடந்த காலங்களை விட இம்முறை  அரசியல் தலையீடுகளால் கிராம  உத்தியோகத்தர்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். நாடு முழுவதும் அவ்வாறு அரசியல் அழுத்தங்களை தாம் எதிர்கொண்டதாக கிராம உத்தியோகத்தர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நாடு பேரழிவை சந்தித்துள்ள இந்த நேரத்தில் தொழிற்சங்க நடவடிக்கை மீது கவனம் செலுத்த நாம் தயாராக இல்லை. எனினும் நிவாரணம் வழங்குவதில் தொடர்ந்து கிராம  உத்தியோகத்தர்களுக்கு  அழுத்தம் கொடுப்பார்களாயின், விருப்பம் இன்றியேனும்  தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நிலை உருவாகலாம் என்றார்.

மேலும் சுதந்திர கிராம உத்தியோகத்தர்கள் சங்க செயலாளர் ஜகத் சந்திரலால் குறிப்பிடுகையில்,

பேரழிவு காலங்களில் அரசாங்கம் வேறு விடயங்களில் ஈடுபட வேண்டாம். "பிரஜா சக்தி" என்ற இந்த புதிய திட்டத்தை பேரழிவு நிவாரணத்திற்காக பயன்படுத்த வேண்டாம். பல மாவட்டங்களில், பிரஜா சக்தி அதிகாரிகளும், அரசியல் அதிகாரிகளும் இந்த நிவாரண உதவிகளை வழங்குவதற்கு கையொப்பமிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் பதுளை மாவட்ட செயலாளரே கடிதம் அனுப்பியுள்ளார். குருநாகல் மாவட்ட செயலாளர் மீது அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஏனைய பிரதேச செயலகங்களில் பிரஜா சக்தி அதிகாரிகளிடமிருந்தும், பிரஜா சக்தியின் அரசியல் அதிகாரிகளிடமிருந்தும் கையொப்பங்களைப் பெற வேண்டியுள்ளது. 25,000 ரூபா வழங்கும் விடயத்தை அரசியல் அதிகாரிகளிடம் சொல்லி பரிந்துரைகளைப் பெற முயன்றால், கிராம உத்தியோகத்தர்  கடமைக்கு இடையூறு ஏற்படும். இதுவரை கிராம உத்தியோகத்தர் சுயமாகவே செயற்பட்டுள்ளனர் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டத்தை வினைத்திறன்...

2026-01-13 17:22:20
news-image

புகையிரத திணைக்களத்தின் பழைய இரும்புகளை அகற்றல்...

2026-01-13 17:17:22
news-image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்...

2026-01-13 16:21:59
news-image

"நாட்டை திவாலாக்கியவர்கள் இன்று உண்ணாவிரதம் இருப்பது...

2026-01-13 17:14:50
news-image

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சத்தியாக்கிரக...

2026-01-13 16:38:59
news-image

அநுராதபுரத்தில் கடந்த ஆண்டில் மாத்திரம் எலிக்காய்ச்சல்...

2026-01-13 16:05:11
news-image

பிரித்தானிய பாராளுமன்றத்தில் சிறப்பாக நடைபெற்ற தமிழ்...

2026-01-13 16:28:30
news-image

யாழில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம்...

2026-01-13 16:28:13
news-image

இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அதிகாரி கைது

2026-01-13 16:07:42
news-image

அயலகத் தமிழர் தின நிகழ்வை நாங்கள்...

2026-01-13 16:04:39
news-image

கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் இலவசக் கல்வியைச்...

2026-01-13 15:34:40
news-image

குறைப்பயன்பாட்டுக் காணிகள், சொத்துகளை முதலீட்டாளர்களுக்கு வழங்க...

2026-01-13 15:17:35