அபிவிருத்தி வங்கிச்சேவைத் துறையில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைபெற்றுள்ள SDB வங்கி, தனது வலுவான அடிப்படைகள், ஒழுக்கமான ஐந்தொகை முகாமைத்துவம் மற்றும் அனைவரையும் அரவணைக்கின்ற, மற்றும் நோக்கத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்ற வங்கிச்சேவை மீதான தொடர்ச்சியான கவனம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில், 2025ன் மூன்றாவது காலாண்டில் நிலைபேற்றியலுடனான நிதியியல் பெறுபேறுகளை தொடர்ந்தும் பதிவாக்கியுள்ளது.
வலுவான செயல்பாட்டுச் சூழலில் நெகிழ்திறனை வெளிப்படுத்தியவாறு, ஈட்டங்கள் மற்றும் நிதி வழங்கல் செலவுகளை மூலோபாயரீதியில் உச்சப் பலனை வழங்கக்கூடியவாறு மாற்றியமைத்தமையின் துணையுடன், 2025ன் 3வது காலாண்டின் முடிவில் ரூபா 254 மில்லியன் என்ற வரிக்குப் பின்னரான இலாபத்தை வங்கி பதிவாக்கியுள்ளது.
SDB வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கபில ஆரியரத்ன அவர்கள் வங்கியின் பெறுபேறுகளைப் பிரதிபலிக்கும் வகையில் கருத்து தெரிவிக்கையில்: விவேகம் மற்றும் நோக்கம் ஆகியவற்றுடன், பரிணமித்து வருகின்ற சந்தை நிலவரங்களைக் கடந்து செல்வதில் வங்கியின் தொடர்ச்சியான ஆற்றலை எமது 3வது காலாண்டு பெறுபேறுகள் எடுத்துக்காட்டுகின்றன.
வருமான வழிமுறைகள் மற்றும் சொத்துக்களின் தரம் ஆகியவற்றின் தொடர்ச்சியான மேம்பாடானது, நிலைபேற்றியலுடன் வளர்ச்சியை சமநிலையில் எமது பிரதான நோக்கத்தின் மீது தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் எமது நீண்ட கால மூலோபாயத்தை உறுதிப்படுத்துகின்றது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM