உணவுப் பொருட்களை வாங்கும்போது அவதானமாக இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவுறுத்தல்

07 Dec, 2025 | 06:36 PM
image

(எம்.மனோசித்ரா)

உண்பதற்கு பொறுத்தமற்ற, வெள்ளத்தால் சேதமடைந்த அரிசியை சட்டவிரோதமாகப் பதப்படுத்தி சந்தைக்கு வெளியிடும் மோசடியை பொது சுகாதார பரிசோதகர்கள் கண்டுபிடித்துள்ளனர். கண்டி மாவட்டத்தில் ஹாரிஸ்பத்துவ பகுதியில் இவ்வாறு வெள்ளத்தால் சேதமடைந்த அரிசியை விற்பனை செய்த சந்தேகநபர்கள் பொது சுகாதார பரிசோதகர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பாவனைக்குதவாத சுமார் 1,000 கிலோகிராம் அரிசி கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் போரலெஸ்ஸா தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளை தொடர்பில் நாடு முழுவதும் அதிகாரிகள் கண்காணித்து வருவதாகத் தெரிவித்த அவர், இத்தகைய நடைமுறைகளில் ஈடுபட வேண்டாம் என்று வர்த்தகர்களை வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக இந்த நேரத்தில் அரிசி வாங்கும் போது விழிப்புடன் இருக்குமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இத்தகைய நடவடிக்கைகள் குறித்த தகவல் தெரிந்தால், பொதுமக்கள் தங்கள் பகுதியின் பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அவ்வாறில்லை எனில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் 24 மணி நேர அவசர அழைப்பு எண் 1926 ஐ தொடர்புகொள்ளுமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டத்தை வினைத்திறன்...

2026-01-13 17:22:20
news-image

புகையிரத திணைக்களத்தின் பழைய இரும்புகளை அகற்றல்...

2026-01-13 17:17:22
news-image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்...

2026-01-13 16:21:59
news-image

"நாட்டை திவாலாக்கியவர்கள் இன்று உண்ணாவிரதம் இருப்பது...

2026-01-13 17:14:50
news-image

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சத்தியாக்கிரக...

2026-01-13 16:38:59
news-image

அநுராதபுரத்தில் கடந்த ஆண்டில் மாத்திரம் எலிக்காய்ச்சல்...

2026-01-13 16:05:11
news-image

பிரித்தானிய பாராளுமன்றத்தில் சிறப்பாக நடைபெற்ற தமிழ்...

2026-01-13 16:28:30
news-image

யாழில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம்...

2026-01-13 16:28:13
news-image

இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அதிகாரி கைது

2026-01-13 16:07:42
news-image

அயலகத் தமிழர் தின நிகழ்வை நாங்கள்...

2026-01-13 16:04:39
news-image

கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் இலவசக் கல்வியைச்...

2026-01-13 15:34:40
news-image

குறைப்பயன்பாட்டுக் காணிகள், சொத்துகளை முதலீட்டாளர்களுக்கு வழங்க...

2026-01-13 15:17:35