துபாயிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகள் - கட்டுநாயக்கவில் ஒருவர் கைது

Published By: Digital Desk 1

07 Dec, 2025 | 10:09 AM
image

துபாயிலிருந்து 42 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டுவந்த பயணியொருவர், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த நபர் இன்று (7) அதிகாலை ஃப்ளை துபாய் குணு-569 விமானத்தில் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்த பின்னரே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கைதான நபர் கொழும்பு, வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர் 28 ஆயிரம் "பிளாட்டினம்" சிகரெட்டுகள் அடங்கிய 140 சிகரெட் அட்டைப் பெட்டிகளை தனது சூட்கேஸிலும் ஒரு அட்டைப் பெட்டியிலும் கொண்டுவந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சந்தேக நபர் எதிர்வரும் 10ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தனது கணவரையும் அவரது காதலியையும் கூரிய...

2026-01-24 12:18:30
news-image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் வழங்கும்...

2026-01-24 15:53:03
news-image

நாடளாவிய ரீதியில் பொலிஸார் அதிரடி: ஒரே...

2026-01-24 15:33:09
news-image

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய இருவர் கைது!

2026-01-24 11:56:34
news-image

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தின்...

2026-01-24 15:17:07
news-image

மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டம் இறுதிக்கட்டத்தில்!

2026-01-24 15:01:30
news-image

இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2026-01-24 15:00:31
news-image

பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த...

2026-01-24 14:16:03
news-image

யாசகப் பெண்ணை கொடூரமாக கொலை செய்த...

2026-01-24 14:06:24
news-image

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில்...

2026-01-24 13:36:37
news-image

தலங்கம மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருள்...

2026-01-24 11:18:58
news-image

நிந்தவூரில் சிறுமி மீது கூட்டு பாலியல்...

2026-01-24 13:23:51