நாட்டில் வடகிழக்கு பருவமழை வலுப்பெறுகின்றது !

Published By: Digital Desk 1

06 Dec, 2025 | 01:08 PM
image

நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை படிப்படியாக வலுப்பெற்று வருகிறது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் நாளை அதிகாலை பனியுடனான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு, வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

அதேநேரம் நாட்டின் கடற்பிராந்தியங்களில் மழை நிலைமையானது, திருகோணமலை முதல் மன்னார் ஊடாக முல்லைத்தீவு, காங்கேசன்துறை வரையிலான கரையோரக் கடற்பிராந்தியங்களில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும். புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையிலான கரையோரக் கடற்பிராந்தியங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன் நாட்டின் கடற்பிராந்தியங்களில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து மாறுபடும். காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 20 முதல் 30 கிலோமீற்றர் வரை இருக்கும். புத்தளம் முதல் முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலும் உள்ள கரையோரக் கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 45 கிலோமீற்றர் வரையிலும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் நிலையானது புத்தளம் முதல் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையிலும் உள்ள கரையோரக் கடற்பிராந்தியங்களில் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும். நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பகுதிகள் லேசானது முதல் மிதமானது வரை இருக்கலாம். மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மிகவும் கொந்தளிப்பான கடல் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலவசக் கல்வியைப் பாதுகாக்க முன்னின்று போராடுவதால்...

2026-01-12 19:35:28
news-image

கல்வி நடவடிக்கையில் தவறு ஏற்பட முடியாது...

2026-01-12 17:08:47
news-image

பாதுகாப்பு அமைச்சின் தடை பட்டியலில் 16...

2026-01-12 19:22:24
news-image

வெலிகந்தையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 28...

2026-01-12 21:46:26
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவை நீக்கக்...

2026-01-12 18:24:12
news-image

நாட்டை மீண்டும் பின்தள்ளும் அரசின் புதிய...

2026-01-12 18:53:25
news-image

நுண்நிதி, கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம்...

2026-01-12 18:52:47
news-image

இலங்கையின் புதிய கல்விக் கொள்கையை ரத்து...

2026-01-12 18:16:28
news-image

கிளிநொச்சி - முரசுமோட்டை வீதியில் பஸ்ஸில்...

2026-01-12 19:17:40
news-image

“பாராளுமன்ற வளாகத்தில் போதைப்பொருள்  பயன்படுத்தும் ஊழியர்களுக்கு...

2026-01-12 19:32:47
news-image

மன்னாரில் நீண்டகாலமாக சீரமைக்கப்படாத வீதி ;...

2026-01-12 18:15:34
news-image

டித்வா புயலுக்கு பிறகு முன்னணி போலந்து...

2026-01-12 19:21:54