பேராதனை பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு விடுத்த முக்கிய அறிவிப்பு!  

05 Dec, 2025 | 07:43 PM
image

சீரற்ற வானிலையால் பேராதனை பல்கலைக்கழகத்தில் சேதமடைந்த பகுதிகளில் துப்புரவு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 15ஆம் திகதி வரை நடைபெறமாட்டாது என பல்கலைக்கழக நிர்வாகம் இன்று (5) அறிவித்துள்ளது. 

சமீபத்தில் நாட்டில் நிலவிவந்த பலத்த மழை, வெள்ளம், மண்சரிவு, புயல் காற்று போன்ற பேரிடர்களால் பேராதனை பல்கலைக்கழகத்தின் பெருமளவு பகுதிகள் பாதிக்கப்பட்டதுடன், பல கட்டடங்கள், தளபாடங்கள் சேதமாகியிருந்தன. இதன் காரணமாக பல்கலைக்கழகத்தின் அன்றாட கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் சேதமடைந்த பகுதிகளில் தற்போது துப்புரவு மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் இடம்பெற்று வருவதால் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் மேலும் ஒரு வார காலத்துக்கு, டிசம்பர் 15ஆம் திகதி திங்கட்கிழமை வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

பல்கலைக்கழகம் இயல்பு நிலைக்குத் திரும்பி, கல்வி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கும் திகதியை மாணவர்களுக்கு அந்தந்த பீடங்கள் அறிவிக்கும் என்றும் மீள ஆரம்பமாகும் திகதி பற்றிய அறிவிப்பு குறித்து தெரிந்துகொள்ள மாணவர்கள், பேராதனை  பல்கலைக்கழகத்தினதும் பீடங்களினதும் உத்தியோகபூர்வ வலைத்தளங்களுக்குள் பிரவேசித்து தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழக வணிகர்களை வட, கிழக்கு மாகாணங்களில்...

2026-01-13 17:43:05
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு...

2026-01-13 17:36:02
news-image

அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டத்தை வினைத்திறன்...

2026-01-13 17:22:20
news-image

புகையிரத திணைக்களத்தின் பழைய இரும்புகளை அகற்றல்...

2026-01-13 17:17:22
news-image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்...

2026-01-13 16:21:59
news-image

"நாட்டை திவாலாக்கியவர்கள் இன்று உண்ணாவிரதம் இருப்பது...

2026-01-13 17:14:50
news-image

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சத்தியாக்கிரக...

2026-01-13 16:38:59
news-image

அநுராதபுரத்தில் கடந்த ஆண்டில் மாத்திரம் எலிக்காய்ச்சல்...

2026-01-13 16:05:11
news-image

பிரித்தானிய பாராளுமன்றத்தில் சிறப்பாக நடைபெற்ற தமிழ்...

2026-01-13 16:28:30
news-image

யாழில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம்...

2026-01-13 16:28:13
news-image

இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அதிகாரி கைது

2026-01-13 16:07:42
news-image

அயலகத் தமிழர் தின நிகழ்வை நாங்கள்...

2026-01-13 16:04:39