இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் புதிய தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன் னாள் அணித்தலைவரான சனத் ஜயசூரிய நிய மிக்கப்படும் சாத்தியம் உள்ளதாக இலங்கை கிரிக் கெட் சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளும் இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவில் மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாக முன்னர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தற்போதுள்ள இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவராக கபில விஜயவர்தன கடமையாற்றி வருகிறார். இவர், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்கவினால் தெரிவுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவராவார்.
மேலும், கபில விஜயவர்தன தலைமையிலான இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவானது, எதிர் வரும் இந்திய கிரிக்கெட் அணியுடனான கிரிக் கெட் தொடரில் பங்குகொள்ளும் இலங்கை கிரிக் கெட் அணியை தெரிவுசெய்யும்.
இதன் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணி பங்குகொள்ளும் கிரிக்கெட் தொடர்களுக்கான வீரர்கள் தெரிவை, புதிதாக நியமிக்கப்படும் இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவிடம் வழங்கப்படும் என வும் கூறப்படுகிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடருக்கான இல ங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் தெரிவா னது, அப்போதைய தெரிவுக் குழு தலைவராக செயற்பட்ட சனத் ஜயசூரிய தலைமையிலான இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவே என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM