இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் விசாகப்பட்டினத்தில் அந்நாட்டின் மிக உயரமான, நீளமான கண்ணாடி நடைபாலம் திறக்கப்பட்டுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் அடி உயரத்தில் 50 மீட்டர் நீளத்தில் இந்த கண்ணாடி நடைபாலம் அமைந்துள்ளது.
அந்நாட்டின் பண மதிப்பில் 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம் “கிழக்குக் கடற்கரையின் ஆபரணம்” என அழைக்கப்படுகிறது.
அடிப்பகுதியில் எந்த பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் நடப்பதைப் போன்ற அச்ச உணர்வை இந்த பாலம் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படுத்தினாலும், இயற்கை அழகு சூழ்ந்த வானவெளியில் நடப்பதைப் போன்ற அனுபவத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
360 டிகிரி கோணத்தில் சுற்றிலும் பசுமையான வெளியில் இந்த கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 40 மி.மீ தடிமன் கொண்ட உயர்தர 3 அடுக்கு கண்ணாடிகள், 40 தொன் வலுவூட்டப்பட்ட எஃகு (உருக்கு) பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், மணிக்கு 250 கி.மீ வேகத்தில் புயல் வீசினாலும் தாங்கி நிற்கக்கூடிய அளவு பலம் கொண்டதாக இந்த கண்ணாடி பாலம் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM