(நெவில் அன்தனி)
ராய்ப்பூர் ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (03) கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய இந்தியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையிலான 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 பந்துகள் மீதம் இருக்க தென் ஆபிரிக்கா 4 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது.

ஏய்டன் மார்க்ராம் குவித்த சதம், மெத்யூ ப்றீட்ஸ், டிவோல்ட் ப்ரவிஸ் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் என்பன தென் ஆபிரிக்காவுக்கு அவசியமான வெற்றியை ஈட்டிக்கொடுத்தன.
இதன் காரணமாக விராத் கோஹ்லி, ருத்துராஜ் கய்க்வோட் ஆகியோர் குவித்த சதங்கள் வீண் போயின.
இந்தப் போட்டி முடிவுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் 1 - 1 என சமப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 359 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 49.2 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 462 ஓட்டங்களைப் பெற்று மிகவும் பரபரப்பான வெற்றியை ஈட்டியது.
மொத்த எண்ணிக்கை 26 ஓட்டங்களாக இருந்தபோது குவின்டன் டி கொக் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
எனினும், ஏய்டன் மார்க்ராம் அற்புதமான சதம் ஒன்றைக் குவித்ததுடன் அடுத்த இரண்டு விக்கெட்களில் பெறுமதிவாய்ந்த இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி தென் ஆபிரிக்க அணியை சிறந்த நிலையில் இட்டார்.

இரண்டாவது விக்கெட்டில் அணித் தலைவர் டெம்பா பவுமாவுடன் 101 ஓட்டங்களைப் பகிர்ந்த ஏய்டன் மார்க்ராம், 3ஆவது விக்கெட்டில் மெத்யூ ப்றீட்ஸுடன் 70 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
ஏய்டன் மார்க்ராம் 10 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 110 ஓட்டங்களைக் குவித்தார்.
டெம்பா பவுமா 46 ஓட்டங்களைப் பெற்றார்.
தொடர்ந்து மெத்யூஸ் ப்றீட்ஸ், டிவோல்ட் ப்ரவிஸ் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 92 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கைக்கு உரமூட்டினர்.

மெத்யூஸ் ப்றீட்ஸ் 68 ஓட்டங்களையும் டிவோல்ட் ப்ரவிஸ் 54 ஓட்டங்களையும் பெற்றனர்.
மொத்த எண்ணிக்கை 332 ஓட்டங்களாக இருந்தபோது டோரி டி ஸோர்ஸி 17 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் உபாதைக்குள்ளாகி ஓய்வுபெற நேரிட்டது.
எனினும் வெற்றிக்கு மேலும் தேவைப்பட்ட ஓட்டங்களை கோர்பின் பொஷ் (29 ஆ.இ.), கேஷவ் மஹாராஜ் (10 ஆ.இ.) ஆகிய இருவரும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்ராசித் கிரிஷ்ணா 85 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 358 ஓட்டங்களைக் குவித்தது.
ரஞ்சியில் மூன்று தினங்களுக்கு முன்னர் சதம் குவித்த விராத் கோஹ்லி, தொடர்ச்சியான இரண்டாவது தடவையாக இன்றைய போட்டியிலும் சதம் குவித்து அசத்தினார்.
ரோஹித் ஷர்மா (14), யஷஸ்வி ஜய்ஸ்வால் (22) ஆகிய இருவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர்.(62 - 2 விக்.)
அந்த சந்தர்ப்பத்தில் ஜோடி சேர்ந்த விராத் கோஹ்லி, ருத்துராஜ் கய்க்வோட் ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி சதங்கள் குவித்ததுடன் 3ஆவது விக்கெட்டில் 195 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர்.

ரஞ்சியில் 135 ஓட்டங்களைக் குவித்த விராத் கோஹ்லி, ராய்பூரில் 102 ஓட்டங்களைப் பெற்றார்.
கோஹ்லி குவித்த 53ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் சதம் இதுவாகும்.
ருத்துராஜ் கய்க்வோட் 105 ஓட்டங்களைப் பெற்றார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ருத்துராஜ் பெற்ற முதலாவது சதம் இதுவாகும்.
வொஷிங்டன் சுந்தர் வந்த வேகத்தில் ஒரு ஓட்டத்துடன் திரும்பிச் சென்றார். (289 - 5 விக்.)
இதனைத் தொடர்ந்து அணித் தலைவர் கே.எல். ராகுல், ரவிந்த்ர ஜடேஜா ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவின் மொத்த எண்ணிக்கையை 258 ஓட்டங்களாக உயர்த்தினர்.
கே.எல். ராகுல் 66 ஓட்டங்களுடனும் ரவிந்ர ஜடேஜா 24 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் மார்க்கோ ஜென்சன் 63 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
ஆட்டநாயகன்: ஏய்டன் மார்க்ராம்











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM