‘டித்வா’ சூறாவளி இலங்கையில் ஏற்படுத்திய கடுமையான பேரழிவுக்கு ஆதரவளிக்கும் வகையில், அமெரிக்கா 2 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான அவசர உயிர் காக்கும் மனிதாபிமான உதவியை வழங்குவதாக அறிவித்துள்ளது.
அமெரிக்க வெளி விவகாரத் துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
பேரிடர் காரணமாக அவசர தேவையில் உள்ள இலங்கை மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவி வழங்கப்படும். அமெரிக்க அரசின் பேரிடர் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், அமெரிக்க பாதுகாப்புத்துறையின் (Department of War) வான்படை போக்குவரத்து திறன்களும் பயன்படுத்தப்பட உள்ளன.
இலங்கை அரசும், பல்வேறு நிவாரண அமைப்புகளும் ஒருங்கிணைந்து உதவி பொருட்கள் துல்லியமாகவும் விரைவாகவும் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றடைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
“டித்வா சூறாவளிக்குப் பிறகு மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வரும் இலங்கை அரசுடன் தொடர்ந்து இணைந்து செயல்படுவதற்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது.
அமெரிக்கா, டித்வா சூறாவளி காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், இலங்கையில் ஏற்பட்ட சேதத்துக்கு வருத்தமும் தெரிவித்துள்ளது.
இவ்வுதவி, பேரிடர் பாதிப்பினால் அவசர நிவாரணம் தேவைப்படும் இலங்கை மக்களுக்கு பெரும் ஆதரவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM