(செ.சுபதர்ஷனி)
நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களுக்கு ஆளாகி தமது உடைமைகளையும் உறவுகளையும் இழந்த நூற்றுக்கணக்கான சிறுவர்களின் மனநலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் சிறுவர்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தி அவர்களின் மனநலத்தை தேற்றுவதற்கு சமூகம் என்ற ரீதியில் நாம் ஒவ்வொருவரும் ஒன்றுபட வேண்டும் என கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் மனநல வைத்திய நிபுணர் தர்ஷனி ஹெட்டியாராய்ச்சி தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் புதன்கிழமை (3) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாடு முழுவதும் நிலவிய மோசமான கால நிலையால் பெரும் வெள்ளம், பாரிய மண்சரிவு, உள்ளிட்ட இயற்கை அனர்த்தத்தால் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன.
இந்தப் பேரிடரில் சிக்கி வீடுகள் உள்ளிட்ட உடமைகளையும் பெற்றோர், சகோதரர்கள் மற்றும் நண்பர் என தமது உறவுகளை இழந்து பல நூற்றுக்கணக்கான சிறுவர்கள் நிர்கதியாகியுள்ளனர். அனர்த்தத்துக்கு முகம் கொடுத்ததன் பின்னர் ஒவ்வொரு சிறுவரினதும் மன நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் சமூகம் என்ற ரீதியில் அவர்களின் மனநலத்தை தேற்றுவது அனைவரினதும் கடமையாகும்.
தற்போது பிரதேச ரீதியில் குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்களின் உதவியுடன் சிறுவர்களின் மனநலம் தொடர்பில் ஆராய்ந்து, உள ஆற்றுப்படுத்துவதற்கு தேவையான உளவியல் ஆலோசனை வழங்குவது, பெற்றோரை தெளிவுபடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பெரியவர்களாகிய நாம் நாம் எமது உணர்வுகளை வெளிக்காட்டுவது போல, சிறுவர்கள் வெளிப்படுத்துவதில்லை. அவர்களின் நடத்தை மாற்றத்தின் மூலமே மன்பாதிப்பை கண்டுக் கொள்ளமுடியும். சிறுவர்களின் கல்வி நடவடிக்கையை தொடர்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கிறேன்.
குறிப்பாக பாடசாலை சூழல் அவர்களின் உள நலத்தை வலுப்படுத்தும் மிக முக்கிய பகுதியாக உள்ளது. அத்தோடு அனர்த்தத்தின் பின்னர் பல குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. அவ்வாறான குடும்பங்களில் உள்ள சிறுவர்களின் பாடசாலை கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.
இவ்வாறான பின்னணியிலும் பாடசாலைக்கு வரும் சிறுவர்களின் சீருடை, புத்தகங்கள் ஒழுங்கற்ற விதத்தில் இருப்பினும், ஆசிரியர்கள் அவர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவமிளித்து அவர்களின் மனதை ஆற்றுப் படுத்துவதற்கு தேவையான விடயங்களை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM