அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் அனுதாபம்

03 Dec, 2025 | 05:29 PM
image

(நா.தனுஜா)

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட சகல குடும்பங்களுடனும் தாம் தோளோடு தோள் நிற்பதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ், பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண மற்றும் மீளக்கட்டியெழுப்பல் முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கைக்கு சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உதவிகளை வழங்கிவருகின்றனர்.

இந்நிலையில் அண்மையில் தெற்கு மற்றும் தெற்காசியப் பிராந்தியங்களில் இயற்கை அனர்த்தங்களினால் ஏற்பட்ட பேரழிவுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் அவரது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.

இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட மிகமோசமான வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஆகியவற்றில் சிக்கி பெருமளவானோர் உயிரிழந்திருப்பது குறித்து மிகுந்த கவலையடைவதாக அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று இவ்வனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சகல குடும்பங்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தை வெளிப்படுத்தியுள்ள அவர், தாம் பாதிக்கப்பட்டோருடன் தோளோடு தோள் நிற்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்நாடுகளின் நிவாரண மற்றும் மீளக்கட்டியெழுப்பல் முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் அவரது எக்ஸ் தளப்பதிவில் உறுதியளித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2026 நிதியாண்டுக்கான வரவு - செலவுத்...

2025-12-05 19:46:49
news-image

இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படுமா ? எச்சரிக்கை...

2025-12-05 19:47:43
news-image

நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுத்தால் மட்டுமே நாங்கள்...

2025-12-05 17:14:34
news-image

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை வைத்து...

2025-12-05 17:28:20
news-image

வெள்ள பேரிடருக்குள்ளானோருக்கு ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு!

2025-12-05 19:25:33
news-image

அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 607ஆக...

2025-12-05 19:02:41
news-image

அவசரகால சட்டத்துக்குரிய ஒழுங்குவிதிகள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது...

2025-12-05 17:14:05
news-image

பேராதனை பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு விடுத்த முக்கிய...

2025-12-05 19:43:24
news-image

யாழ். சிறை விளக்கமறியல் கைதி கோமா...

2025-12-05 18:25:33
news-image

டித்வா புயல் பாதிப்பு : இலங்கைக்கான...

2025-12-05 18:11:16
news-image

யாழ். மாநகர சபையின் 2026க்கான வரவு...

2025-12-05 17:37:48
news-image

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றில் விசேட...

2025-12-05 17:31:46