(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பதற்கும், மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்கும் முப்படையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள். பொதுமக்களின் பாதுகாக்க முப்படையினர் தமது உயிரை தியாகம் செய்துள்ளார்கள். முப்படையினரின் உயரிய சேவைக்கு கௌரவமளிக்கிறோம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (03) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
நாடு மிக மோசமான அனர்த்த நிலையை எதிர்கொண்டுள்ளது. இந்த இக்கட்டான நிலை குறித்து பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கும்,எமது தரப்பு யோசனைகளை முன்வைப்பதற்கும் அரசாங்கத்திடம் அனுமதி கோரினோம். இருப்பினும் அரசாங்கம் அதற்கு அனுமதியளிக்கவில்லை.
அனர்த்தம் மற்றும் ஏற்பட்ட அழிவுகள் பற்றி இன்றும் (நேற்று) நாளையும் (இன்றும்) குழுநிலை விவாதத்தில் உரையாடுவோம்.இந்த அனர்த்த்தால் பலர் உயிரிழந்துள்ளார்கள். பலர் காணாமல் போயுள்ளார்கள். இலட்சக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளார்கள்.மீட்பு பணிகள் தொடர்கின்றன. ஆகவே ஏற்பட்டுள்ள இழப்புக்கு ஆழந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பதற்கும், மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்கும் முப்படையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள். பொதுமக்களின் பாதுகாக்க முப்படையினர் தமது உயிரை தியாகம் செய்துள்ளார்கள்.முப்படையினரின் உயரிய சேவைக்கு கௌரவமளிக்கிறோம்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM