முப்படையினரின் உயரிய சேவைக்கு கௌரவமளிக்கிறோம் - கயந்த கருணாதிலக

03 Dec, 2025 | 05:06 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பதற்கும், மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்கும் முப்படையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள்.  பொதுமக்களின் பாதுகாக்க  முப்படையினர் தமது உயிரை தியாகம் செய்துள்ளார்கள். முப்படையினரின் உயரிய சேவைக்கு கௌரவமளிக்கிறோம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு  நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்  என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான  கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (03)  நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின்  பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு,  வர்த்தகம் மற்றும் உணவு  பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார  அபிவிருத்தி அமைச்சு ஆகிய  அமைச்சுகளுக்கான  நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாடு மிக மோசமான  அனர்த்த நிலையை  எதிர்கொண்டுள்ளது. இந்த இக்கட்டான நிலை குறித்து பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கும்,எமது தரப்பு யோசனைகளை முன்வைப்பதற்கும் அரசாங்கத்திடம் அனுமதி கோரினோம். இருப்பினும் அரசாங்கம் அதற்கு அனுமதியளிக்கவில்லை.

அனர்த்தம் மற்றும் ஏற்பட்ட அழிவுகள் பற்றி இன்றும் (நேற்று) நாளையும்  (இன்றும்)  குழுநிலை விவாதத்தில் உரையாடுவோம்.இந்த அனர்த்த்தால் பலர் உயிரிழந்துள்ளார்கள். பலர் காணாமல் போயுள்ளார்கள். இலட்சக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளார்கள்.மீட்பு பணிகள்  தொடர்கின்றன. ஆகவே    ஏற்பட்டுள்ள இழப்புக்கு ஆழந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பதற்கும், மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்கும் முப்படையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள்.  பொதுமக்களின் பாதுகாக்க  முப்படையினர் தமது உயிரை தியாகம் செய்துள்ளார்கள்.முப்படையினரின் உயரிய சேவைக்கு கௌரவமளிக்கிறோம்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு  நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக யாழ்ப்பாணத்திற்காக 36 கோடி...

2025-12-05 16:23:57
news-image

'எனக்கு கெப் வேண்டாம்; அந்த நிதியை...

2025-12-05 15:16:44
news-image

விவசாயம், பெருந்தோட்டத்துறையை மேம்படுத்த சர்வதேச நாடுகளின்...

2025-12-05 20:39:51
news-image

ஆடம்பரங்களை தவிர்த்து கிறிஸ்து பிறப்பு விழாவை...

2025-12-05 20:11:15
news-image

மக்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்தத் தவறியமைக்காக...

2025-12-05 17:13:10
news-image

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களில் முழுநாடும் அதிர்ச்சியடைந்துள்ளது...

2025-12-05 17:16:55
news-image

2026 நிதியாண்டுக்கான வரவு - செலவுத்...

2025-12-05 20:03:15
news-image

இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படுமா ? எச்சரிக்கை...

2025-12-05 19:47:43
news-image

நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுத்தால் மட்டுமே நாங்கள்...

2025-12-05 17:14:34
news-image

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை வைத்து...

2025-12-05 17:28:20
news-image

வெள்ள பேரிடருக்குள்ளானோருக்கு ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு!

2025-12-05 19:25:33
news-image

அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 607ஆக...

2025-12-05 19:02:41