மோசமான நெருக்கடிக்கு மத்தியில் அதிக விலைக்கு உணவு பொருட்களை விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர்

03 Dec, 2025 | 04:17 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

நாடு எதிர்கொண்டுள்ள மிக மோசமான நெருக்கடிக்கு மத்தியில் அதிக விலைக்கு உணவு பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதற்குரிய ஆலோசனைகள் உரிய தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று  கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (03)  நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின்  பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு,  வர்த்தகம் மற்றும் உணவு  பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார  அபிவிருத்தி அமைச்சு ஆகிய  அமைச்சுகளுக்கான  நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும்    ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம். நெருக்கடியான சந்தர்ப்பத்தின் போது  நாட்டுக்கும்,  நாட்டு மக்களுக்கும் உதவி கரம் நீட்டிய உலக நாடுகளுக்கும், அரசசார்பற்ற நிறுவனங்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அனர்த்தத்தின் போது எமது மக்கள் பிறருக்கு உதவி செய்துள்ளார்கள். நாம் நமக்கு என்ற கொள்கைக்கு அமைய  எம்மக்கள் செயற்பட்டது வரவேற்கத்தக்கது. இக்கட்டான நிலைமை விளங்கிக் கொண்டு மக்கள் செயற்படும் போது எதிர்க்கட்சியினர் அரசியல் இலாபம் தேடிக் கொள்வதற்கு வெறும் குற்றச்சாட்டுக்களை மாத்திரம் முன்வைப்பது வெறுக்கத்தக்கது.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கும்  உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு புதிய திட்டங்கள் செயற்படுத்தப்படும்.

நாடு எதிர்கொண்டுள்ள மிக மோசமான நெருக்கடிக்கு மத்தியில் அதிக விலைக்கு உணவு பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதற்குரிய ஆலோசனைகள் உரிய தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் அதிக இலாபமடைவதற்காக  அதிக விலைக்கு அத்தியாவசிய பொருட்களை  விற்பனை செய்வதை வியாபாரிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். சகல தரப்பினர் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2026 நிதியாண்டுக்கான வரவு - செலவுத்...

2025-12-05 20:03:15
news-image

இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படுமா ? எச்சரிக்கை...

2025-12-05 19:47:43
news-image

நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுத்தால் மட்டுமே நாங்கள்...

2025-12-05 17:14:34
news-image

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை வைத்து...

2025-12-05 17:28:20
news-image

வெள்ள பேரிடருக்குள்ளானோருக்கு ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு!

2025-12-05 19:25:33
news-image

அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 607ஆக...

2025-12-05 19:02:41
news-image

அவசரகால சட்டத்துக்குரிய ஒழுங்குவிதிகள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது...

2025-12-05 17:14:05
news-image

பேராதனை பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு விடுத்த முக்கிய...

2025-12-05 19:43:24
news-image

யாழ். சிறை விளக்கமறியல் கைதி கோமா...

2025-12-05 18:25:33
news-image

டித்வா புயல் பாதிப்பு : இலங்கைக்கான...

2025-12-05 18:11:16
news-image

யாழ். மாநகர சபையின் 2026க்கான வரவு...

2025-12-05 17:37:48
news-image

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றில் விசேட...

2025-12-05 17:31:46