யாழ். எழுவைதீவு மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் : ஹரிணி அமரசூரிய

03 Dec, 2025 | 03:56 PM
image

( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

யாழ்ப்பாணம் எழுவைதீவு சரவணபவா வித்தியாலயத்தின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.  

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (03)  நடைபெற்ற  அமர்வின் போது, வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரனால் யாழ்ப்பாணம் எழுவைத்தீவிலுள்ள சரவணபவா வித்தியாலயத்தின் மாணவர்கள் க.பொ.த சாதாரணத் தரப் பரீட்சைக்கு  தோற்றும் போது எதிர்கொள்ளும்  பிரச்சினைகள்  குறித்து கேள்வியெழுப்புகையில்,

எழுவைத்தீவிலுள்ள சரவணபவா வித்தியாலயத்தின் மாணவர்கள் க.பொ.த சாதாரணத் தரப் பரீட்சையில் தோற்றுவதற்காக பரீட்சை நிலையம் செல்வதற்காக பெரும் சிரமப்படுகின்றனர். ஊர்காவற்துறையில் தங்கியிருந்தே பரீட்சையை எழுதும் நிலைமை உள்ளது. இந்த மாணவர்களுக்காக விசேட படகு சேவைகளை ஏற்பாடு செய்ய முடியுமா என்றார்.

இதற்கு எழுந்து பதிலளித்த கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய, எழுவைத்தீவிலுள்ள சரவணபவா வித்தியாலயத்தில் 1999இல் இருந்து பரீட்சை நிலையம் நடத்தப்படவில்லை. குறைந்தளவான மாணவர்கள் இருப்பதாலேயே அங்கு பரீட்சை நிலையத்தை அமைக்க முடியாதுள்ளது. தற்போது அந்த பாடசாலையின் சாதாரண தர மாணவர்கள் ஊர்காவற்துறையில் உள்ள சென். அந்தனி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையத்திலேயே பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

இந்த பாடசாலையில் இருந்து 2023 இல் 8 பேரும்,  2024 இல் 5  பேரும்  பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். இதனால் இவர்கள் அருகில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவர்களுக்குரிய போக்குவரத்து சேவைகள் தொடர்பில் அவதானம் செலுத்துகின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2026 நிதியாண்டுக்கான வரவு - செலவுத்...

2025-12-05 19:46:49
news-image

இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படுமா ? எச்சரிக்கை...

2025-12-05 19:47:43
news-image

நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுத்தால் மட்டுமே நாங்கள்...

2025-12-05 17:14:34
news-image

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை வைத்து...

2025-12-05 17:28:20
news-image

வெள்ள பேரிடருக்குள்ளானோருக்கு ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு!

2025-12-05 19:25:33
news-image

அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 607ஆக...

2025-12-05 19:02:41
news-image

அவசரகால சட்டத்துக்குரிய ஒழுங்குவிதிகள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது...

2025-12-05 17:14:05
news-image

பேராதனை பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு விடுத்த முக்கிய...

2025-12-05 19:43:24
news-image

யாழ். சிறை விளக்கமறியல் கைதி கோமா...

2025-12-05 18:25:33
news-image

டித்வா புயல் பாதிப்பு : இலங்கைக்கான...

2025-12-05 18:11:16
news-image

யாழ். மாநகர சபையின் 2026க்கான வரவு...

2025-12-05 17:37:48
news-image

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றில் விசேட...

2025-12-05 17:31:46