இலங்கைக்கான பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் அன்ட்றூ ஸ்னோவ்டென், பிரித்தானியாவிலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் நிமல் சேனாதீரவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
கலந்துரையாடல் குறித்து பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் அன்ட்றூ ஸ்னோவ்டென் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
பிரிட்டனின் அனைத்து கட்சிகளின் ஆதரவையும் இலங்கைக்கு தெரிவித்துக்கொள்வதுடன் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எமது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இருப்பதாக தெரிவித்தேன்.
அவசரகால உதவிக்காக பிரிட்டன் அரசு அறிவித்துள்ள 675,000 பவுண்ட் ( £ ) நிதி ஒதுக்கீடு பற்றியும், நீண்ட கால மறுசீரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு புனரமைப்பு பணிகளுக்குத் தேவையான ஆதரவுகள் குறித்து உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடினேன்.
டிட்வா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு பிரிட்டன் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளதாகவும் வலியுறுத்தினேன் என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM