நடிகை சமந்தாவிற்கும், இயக்குநர் ராஜ் நிடிமொருக்கும் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் திருமணம் நடைபெற்றது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தாவிற்கும் , தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான நாக சைதன்யாவுக்கும் திருமணம் நடைபெற்று, பிறகு விவாகரத்து செய்து, இருவரும் பிரிந்தனர்.
அதன் பிறகு நடிகர் நாக சைதன்யா 'பொன்னியின் செல்வன்' படத்தின் நடித்த நடிகை சோபிதா துளிபாலாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் 'தி ஃபேமிலி மேன்' எனும் இணைய தொடரை இயக்கிய இயக்குநர் ராஜ் நிடிமோருக்கும், சமந்தாவிற்கும் காதல் இருப்பதாக தகவல் வெளியானது.
இருவரும் டுபாய் உள்ளிட்ட நகரங்களில் ஒன்றாக சுற்றிக் கொண்டிருப்பதாக இணையத்தில் புகைப்படங்கள் வெளியாயின.
இந்நிலையில் இவர்கள் இருவரும் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நேற்று நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களை கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் வெளியிட்டுள்ளது.
ஆனால் இது தொடர்பாக சமந்தாவும் இயக்குநர் ராஜுவும் விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM