எம்மில் பெரும்பாலான மக்கள் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றுகிறார்கள் அல்லது நின்று கொண்டே வேலை செய்கிறார்கள். இதன் காரணமாக அவர்களுக்கு மூட்டு வலி ஏற்படக்கூடும். அத்துடன் முதுமையின் காரணமாகவும் எம்முடைய மூட்டு எலும்புகள் தேய்மானம் அடைந்து மூட்டு வலி ஏற்படக்கூடும். பொதுவாக மூட்டு வலி ஏற்பட்டால் வைத்திய நிபுணர்கள் மூட்டு மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொள்ளலாம் என பரிந்துரை செய்கிறார்கள்.
ஆனால் சிலருக்கு மூட்டு வலி இருந்தாலும் மூட்டு மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணம் பெறும் அளவிற்கு அவர்களுடைய வயது மற்றும் உடல்நிலை தடையாக இருக்கும். இதுபோன்ற நிலையில் மூட்டு வலிக்கு முழுமையான நிவாரணம் அளிக்கும் நவீன சிகிச்சையாக ரேடியேஷன் தெரபி எனப்படும் கதிர்வீச்சு சிகிச்சை பலனளிப்பதாக வைத்தியர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
பொதுவாக ரேடியேஷன் தெரபி எனும் கதிர்வீச்சு சிகிச்சை என்பது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் ஒருங்கிணைந்த சிகிச்சைகளில் ஒரு சிகிச்சையாகும். ஆனால் இதனை மூட்டு வலியால் பாதிக்கப்பட்டு, மூட்டு மாற்று சத்திர சிகிச்சை செய்து கொள்ள இயலாத நோயாளிகளுக்கு இத்தகைய சிகிச்சையின் மூலம் அவர்களுக்கு முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும் என வைத்தியர்கள் உறுதிப்பட தெரிவிக்கிறார்கள். இத்தகைய தருணங்களில் மிக குறைந்த அளவு வீரியம் கொண்ட கதிர்வீச்சு மூலம் மூட்டு வலிக்கான பிரத்யேக சிகிச்சை அளிக்கப்பட்டு, நிவாரணம் வழங்கப்படுகிறது.
வைத்தியர் அமித் ஜத்வானி தொகுப்பு அனுஷா.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM