அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு சீனா அரசாங்கம், ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியையும், 10 மில்லியன் சீன ரென்மின்பி மதிப்புள்ள நிவாரண பொருட்களையும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
டிவாட் புயல் இலங்கையில் ஏற்படுத்திய கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பல உயிரிழப்புகள் மற்றும் சொத்துச் சேதத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இலங்கையில் பாதிக்கப்பட்டோருடன் சீன மக்கள் தங்களது துயரத்தை பகிர்கின்றனர்.
இலங்கை சகோதரர்களின் பேரழிவுத் துயர உதவிக்கு ஆதரவாக, சீன செஞ்சிலுவைச் சங்கமானது, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அவசர நிதி உதவியாக 1,00,000 அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. அதேசமயம், சீன அரசாங்கத்திடமிருந்து அவசர உதவிகள் நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், இலங்கையில் உள்ள சீன வணிக சங்கமும், வெளிநாட்டிலுள்ள சீன சங்கமும் நன்கொடை நடவடிக்கைகளைத் முன்னெடுத்து, இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக மொத்தம் ஒரு கோடி ரூபாவை சேகரித்துள்ளன.
ஜனாதிபதி அனுராகுமார திசாநாயக்கவின் உறுதியான தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டலின் கீழ், சர்வதேச சமூகத்தின் ஒருங்கிணைந்த ஆதரவுடன், வீரமிக்க இலங்கை மக்கள் இந்த பேரழிவை வெற்றிகரமாக கடந்து, ஒன்றுபட்டு நிலைத்துணையுடன் தங்கள் நாட்டை விரைவில் மீண்டும் கட்டி எழுப்புவார்கள் என நாங்கள் நம்புகிறோம்











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM