‘அதிகாரிகள் பாதுகாப்பு மதிப்பீடுகளை மேற்கொள்ளும் வரை வீடு திரும்ப வேண்டாம்’ - தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்

Published By: Digital Desk 3

01 Dec, 2025 | 02:08 PM
image

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலகங்களின் அதிகாரிகள் ஆய்வுகளை நடத்தி தங்கள் உத்தியோகபூர்வ தீர்மானங்களை வெளியிடும் வரை பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின்  (NBRO) சிரேஷ்ட விஞ்ஞானி கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, தற்காலிகமாக பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள நபர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து, தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கி, அவ்வாறு செய்வது பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்தும் வரை திரும்பிச் செல்ல வேண்டாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, மிகவும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வசிப்பவர்கள் இடர் முகாமைத்துவ மையங்களில் தொடர்ந்து தங்கியிருக்குமாறு கலாநிதி சேனதீரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏழு மாவட்டங்களில் உள்ள 70 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வழங்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கைகள் மற்றும் சிவப்பு எச்சரிக்கைகள் (வெளியேற்ற அறிவிப்புகள்) மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதால், மண்சரிவுகள், பாறைகள் சரிவுகள் மற்றும் கரை உடைப்பு ஏற்படும் அபாயம் வரும் நாட்களில் தொடரும் என கலாநிதி சேனதீரா மேலும் தெரிவித்துள்ளார்.

தரையில் இருந்து அசாதாரண ஒலிகளைக் கவனித்தாலோ அல்லது நீர் ஊற்றுகள் திடீரென தோன்றுவதையோ அல்லது மறைவதையோ கவனித்தாலோ உடனடியாக வெளியேறுமாறு பொதுமக்களை அவர் அறிவுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எரிபொருள் விநியோகச் சிக்கல்கள்  - அமைச்சரவை...

2026-03-17 15:04:48
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-03-17 14:42:31
news-image

கிளிநொச்சி கடற்பரப்பில் 78 கிலோ போதைப்பொருள்...

2026-03-17 14:48:13
news-image

இலங்கையில் UPI கட்டண முறை விரிவாக்கம்...

2026-03-17 14:29:11
news-image

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாலத்தை புனரமைக்க...

2026-03-17 14:10:02
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை 

2026-03-17 13:40:17
news-image

மாற்றுக் கொள்கையும் மாற்றுத் திட்டமுமே எமது...

2026-03-17 13:32:31
news-image

எரிபொருள் QR ஒதுக்கீடுகள் ஒவ்வொரு சனிக்கிழமையும்...

2026-03-17 13:08:19
news-image

தேயிலை பைகளில் மறைத்து வைத்து ஹெரோயின்...

2026-03-17 13:26:01
news-image

மத்தியக்கிழக்கு போரால் சுற்றுலாத்துறைக்கு நாளொன்றுக்கு 5...

2026-03-17 13:43:41
news-image

எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க கியூ ஆர்...

2026-03-17 12:22:03
news-image

மட்டக்களப்பில் டெங்கு பரவல் அதிகரிப்பு :...

2026-03-17 12:05:15