சீரற்ற வானிலையால் பேராதனை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு முதலான அனர்த்தங்கள் காரணமாக பல்கலைக்கழக நடவடிக்கைகள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
கடந்த வியாழக்கிழமை (27) மாலை பல்கலைக்கழக உபவேந்தர் வெளியிட்ட அறிவிப்பின்படி, வெள்ளிக்கிழமை (28) முதல் பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே பணிக்கு வரவேண்டும் எனவும் உபவேந்தரால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போதும் அந்நிலை தொடர்கிறது.
மேலும், தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக பல்கலைக்கழக வளாகம் உட்பட பல பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக, நிர்வாக பீடத்தின் பீடாதிபதி அலுவலகத்தில் கதிரைகள், தளபாடங்கள், கணினிகள் முதலானவை சேதமடைந்துள்ளன.
அத்துடன் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கும் விடுதிகளும் நீரில் மூழ்கியுள்ள நிலையில் மாணவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM