பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தம் 

30 Nov, 2025 | 07:12 PM
image

சீரற்ற வானிலையால் பேராதனை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு முதலான அனர்த்தங்கள் காரணமாக பல்கலைக்கழக நடவடிக்கைகள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கடந்த வியாழக்கிழமை (27) மாலை பல்கலைக்கழக உபவேந்தர் வெளியிட்ட அறிவிப்பின்படி, வெள்ளிக்கிழமை (28) முதல் பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. 

அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே பணிக்கு வரவேண்டும் எனவும் உபவேந்தரால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போதும் அந்நிலை தொடர்கிறது. 

மேலும், தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக பல்கலைக்கழக வளாகம் உட்பட பல பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக, நிர்வாக பீடத்தின் பீடாதிபதி அலுவலகத்தில் கதிரைகள், தளபாடங்கள், கணினிகள் முதலானவை சேதமடைந்துள்ளன. 

அத்துடன் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கும் விடுதிகளும் நீரில் மூழ்கியுள்ள நிலையில் மாணவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-03-17 14:42:31
news-image

இலங்கையில் UPI கட்டண முறை விரிவாக்கம்...

2026-03-17 14:29:11
news-image

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாலத்தை புனரமைக்க...

2026-03-17 14:10:02
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை 

2026-03-17 13:40:17
news-image

மாற்றுக் கொள்கையும் மாற்றுத் திட்டமுமே எமது...

2026-03-17 13:32:31
news-image

எரிபொருள் QR ஒதுக்கீடுகள் ஒவ்வொரு சனிக்கிழமையும்...

2026-03-17 13:08:19
news-image

தேயிலை பைகளில் மறைத்து வைத்து ஹெரோயின்...

2026-03-17 13:26:01
news-image

மத்தியக்கிழக்கு போரால் சுற்றுலாத்துறைக்கு நாளொன்றுக்கு 5...

2026-03-17 13:43:41
news-image

எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க கியூ ஆர்...

2026-03-17 12:22:03
news-image

மட்டக்களப்பில் டெங்கு பரவல் அதிகரிப்பு :...

2026-03-17 12:05:15
news-image

மத்திய கிழக்கு போர் சூழலால் ஏற்படும்...

2026-03-17 12:01:02
news-image

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலஞ்ச...

2026-03-17 12:31:04