இலங்கையில் தற்பொழுது பரவலாக பேசப்பட்டு வருகின்ற சிறுநீரக விற்பனை விடயத்தில் மலையக தோட்ட பகுதிகளை சேர்ந்தவர்களே அதிகமான சிறுநீரகங்களை விற்பனை செய்கின்றார்கள் என சுகாதார அமைச்சு அறிக்கை விடுத்திருப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
டயகம சந்திரிகாமம் தோட்டத்தில் நடைபெற்ற 25 வீடுகளை கொண்ட புதிய கிராமத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் மறைந்த பெ.சந்திரசேகரனின் தனிவீட்டு கொள்ளை வழிநடத்தலின் பேரில் நேற்று இவ் வைபவத்தில் அவர் மேலும் உரை நிகழ்த்தியவதாவது,
சென்ற வருடம் ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதி மாற்றத்திற்கான புரட்சியில் மலையக மக்கள் சார்பாக தமிழ் முற்போக்கு கூட்டணி முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக தொழிலாளர்களுக்கு 7 பேர்ச் காணி மற்றும் தனி வீட்டு திட்டத்திற்கு சம்மந்தம் தெரிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் இன்று நல்லாட்சி அரசாங்கம் தனி வீட்டு திட்டத்தை படிப்படியாக செயற்படுத்தி வருகின்றது. 2016ம் ஆண்டில் 2 புதிய கிராமங்கள் அமைக்கும் திட்டம் கூட்டணியினால் செயற்படுத்தப்படவுள்ளது. எதிர்வரும் 30ம் திகதி அக்கரப்பத்தனை பங்கட்டன் தோட்டத்திலும் 31ம் திகதி பொகவந்தலாவையில் இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்படவுள்ளது.
அதேவேளை ஒவ்வொரு தோட்டத்திலும் 25 தொடக்கம் 30 வீடுகள் அமைவாக இவ்வருடத்தில் 1270 வீடுகள் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அத்தோடு இந்தியா அரசாங்கத்தின் 4000 வீடுகள் அமைக்கும் திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளது.
மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் மறைந்த பெ.சந்திரசேகரனின் அவாவுக்கு ஏற்ப தனி வீடுகளை அமைத்துக்கொடுக்க மலையக மக்கள் வேலைத்திட்டங்களை முன்வைத்து வருகின்றது. ஆனால் தனி வீடு புதிய கிராமம் அமைக்கும் அங்கீகாரம் பெற்ற அமைச்சர் பழனி திகாம்பரம் இவரின் செயல்பாடுகள் உள்வாங்கப்பட்டு வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்படுவதாக அவர் கூறினார்.
தோட்ட பகுதிகளில் வீடு இல்லா பிரச்சினை அதிகமாக காணப்படுவதால் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உதவியுடன் வங்கி கடன்கள் பெற்று காணி அதிகாரத்துடன் சுமார் 5 இலட்சத்து 5 ஆயிரம் ரூபா செலவில் தொழிலாளர்களே தமது வீட்டை அமைத்துக் கொள்ளும் வாய்ப்பினை மலையக மக்கள் முன்னணி உருவாக்கியுள்ளது.
இதில் வங்கி கடனாக 3 இலட்சம் ரூபாவும் தேசிய வீடமைப்பு அதிகார சபை ஒரு இலட்சம் நன்கொடையாகவும் வழங்கும் அதேவேளை கூரை வேலைகளுக்காக தோட்டங்களில் விற்பனை செய்யப்படும் மரங்களை தொழிலாளர்களுக்கு வழங்குவதன் மூலம் இத்தொகை சமமாக்கப்படும்.
வறுமையை எதிர்நோக்கும் தொழிலாளர்கள் தங்களின் சிறுநீரகங்களை வெளியாட்களுக்கு விற்பனை செய்து வருகின்றார்களாம் என அண்மையில் சுகாதார அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தோட்ட பகுதியை சேர்ந்தவர்களே அதிகமான சிறுநீரகங்களை சில தரகர்கள் ஊடாக விற்பனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறுமை இருக்க தான் செய்யும் அதற்காக சிறுநீரகங்களை விற்பனை செய்து எதிர்கால வாழ்க்கையை பாலாக்கி கொள்ள வேண்டாம். அதுவும் தரகர்கள் ஊடாக சிறுநீரகங்கள் விற்பனை செய்யும் செயற்பாடுகள் மலையகத்தில் இடம்பெறுவது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு தோட்டப்பகுதிகளில் இவ்வாறான தரகர்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என தனது உரையில் மேலும் தெரிவித்தார்.
(க.கிஷாந்தன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM