(க.கிஷாந்தன்)
நாட்டில் தற்போது காணப்படுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் மலையகம் மற்றும் மட்டக்களப்பில் மரக்கறிகளின் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இக்காலப்பகுதியில் மரக்கறி வகைகளின் விலை வீழ்ச்சி காணப்பட்டிருக்கும் ஆனால். இந்த வருடத்தில் இவ்வாறு மரக்கறி வகைகள் விலை அதிகரிப்பால் மக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
மலையகம் மற்றும் மட்டக்களப்பு விவசாயிகளினால் பயிரிடப்பட்டுள்ள மரக்கறிகளின் அறுவடை காலம் நெருங்கியுள்ள நிலையில், நாட்டில் தொடர்ந்தும் அதிகரித்து வரும் மழையின் காரணமாக குறித்த மரக்கறிகள் அழுகி போவதற்கான ஆபத்து உள்ளதாக இப்பகுதி விவசாய மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் குறித்த நிலை தொடர்ந்து நீடிப்பதன் காரணமாக தற்போது சந்தையில் மரக்கறிகளின் விலை குறிப்பிட்டளவு உயர்ந்துள்ளது. தொடர்ந்தும் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்குமாயின் மேலும் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மலையகத்தில் விற்கப்படும் சில மரக்கறிகளின் தற்போதைய விலை
லீக்ஸ் ஒரு கிலோ - 160 ரூபா
பாவக்காய் ஒரு கிலோ - 200 ரூபா
வெண்டிக்காய் ஒரு கிலோ - 120 ரூபா
புடலங்காய் ஒரு கிலோ - 120 ரூபா
தக்காளி ஒரு கிலோ - 120 ரூபா
கோவா ஒரு கிலோ - 140 ரூபா
கறிமிளகாய் ஒரு கிலோ - 320 ரூபா
கத்திரிக்காய் ஒரு கிலோ விலை - 120 ரூபா
போஞ்சி ஒரு கிலோ - 240 ரூபா
பச்சை மிளகாய் ஒரு கிலோ விலை - 1000 ரூபா
கரட் ஒரு கிலோ - 180 ரூபாவிலிருந்து 200 ரூபா வரை விற்கப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM