சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் நிலவும் பெருவெள்ளம், மண்சரிவு மற்றும் பல்வேறு அனர்த்த சம்பவங்களை முன்னிட்டு உயிரிழப்புகளின் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதுவரை கிடைத்துள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, மொத்தம் 153 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 191 பேர் இதுவரை காணாமல்போயுள்ளனர்.
பல மாவட்டங்களில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பாதுகாப்புப் படைகள் மற்றும் மீட்புக்குழுக்கள் 24 மணிநேரமும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியான கனமழை, பலத்த காற்று மற்றும் ஆறுகள் நிரம்பி வழிவந்ததன் காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு பல கிராமங்களை வெள்ளத்தில் மூழ்கடித்து, வீடுகள், வீதிகள், வயல் நிலங்கள் உள்ளிட்டவற்றுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்கவும், வெளியிடப்படும் புதிய எச்சரிக்கைகளுக்கு தொடர்ந்து கவனம் செலுத்தவும் கேட்டுக் கொண்டுள்ளது.
சீரற்ற வானிலையால் இதுவரை 153 பேர் பலி, 191 பேர் மாயம்
Published By: Digital Desk 3
29 Nov, 2025 | 08:06 PM
-
சிறப்புக் கட்டுரை
ஐக்கிய நாடுகளுக்கு குழிபறிக்கும் நோக்குடன் டொனால்ட்...
25 Jan, 2026 | 12:49 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்தியப் பெருங்கடலில் கடல்சார் பலதரப்புவாதத்தின் புதிய...
20 Jan, 2026 | 10:21 AM
-
சிறப்புக் கட்டுரை
ஹரிணிக்கு நடக்கப்போவது என்ன?
18 Jan, 2026 | 05:10 PM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்ராலின் பிரதமர் மோடிக்கு...
18 Jan, 2026 | 06:25 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈராக் முதல் வெனிசுவேலா வரை: அமெரிக்காவின்...
13 Jan, 2026 | 05:35 PM
-
சிறப்புக் கட்டுரை
2026 அரசாங்கத்திற்கு கூடாத காலமா
12 Jan, 2026 | 12:00 PM
மேலும் வாசிக்க











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM