எம்மில் பலருக்கு தகுதியும், திறமையும் இருந்தும் பொருத்தமான வாய்ப்பு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருப்பார்கள். சிலருக்கு நிம்மதி என்பது இல்லாமல் இருக்கும். அதனைத் தொடர்ந்து வீண் செலவு -கண் பாதிப்பு -தீய பழக்க வழக்கம் - போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
வேறு சிலருக்கு வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றாலும், அடிக்கடி சுகவீனம் ஏற்படும். தாயாருடன் கருத்து வேறுபாடு அடிக்கடி நிகழும். இது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படுவதற்கு எம்முடைய ஜாதகத்தில் உள்ள மாந்தி தோஷமே முதன்மையான காரணமாகும். இத்தகைய தோஷத்தை நிவர்த்தி செய்வதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில பிரத்யேகமான வழிமுறையை குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் : பசும்பால், ஏலக்காய்
திங்கட்கிழமையைத் தெரிவு செய்து கொண்டு அன்று அதிகாலையில் பசு மாட்டிலிருந்து கறந்த பாலில் சிறிதளவு ஏலக்காயை பொடித்து அதில் வைத்து குளியல் அறைக்கு எடுத்துச் சென்று உங்கள் தலை முதல் கால் வரை இந்த பிரத்யேக பசும்பாலில் உங்களது உடலை ஊற வைக்க வேண்டும். சில நிமிடங்கள் ஆவது அந்தப் பால் உங்களுடைய தலையில் இருந்து பாதம் வரை இருந்திட வேண்டும். அதன் பிறகு நீங்கள் வழக்கம் போல் நீராடலாம். இதனை திங்கட்கிழமைகளில் மட்டும்தான் மேற்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உங்களுக்கு சௌகரியமான நாளில் இதனை மேற்கொண்டாலும்... உங்களிடம் சூட்சமமாக மறைந்திருக்கும் மாந்தி தோஷம் விலகி, உங்களுக்கு இந்த பிறவியில் கிடைக்க வேண்டிய சுப பலன்கள் எந்தவித தடையும் இன்றி கிடைக்கும்.
தொகுப்பு : சுபயோக தாசன்











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM