எம்மில் சிலருக்கு திடீரென்று இதய துடிப்பில் சம சீரற்ற தன்மை ஏற்படுவதாக உணர்வார்கள். வேறு சிலர் இத்தகைய சம சீரற்ற இதயத் துடிப்பின் காரணமாக மார்பகப் பகுதியில் ஒரு வகையினதான அசௌகரியத்தை உணர்வார்கள். இவை அரித்மியா எனப்படும் சீரற்ற இதயத் துடிப்பு பாதிப்பிற்கான அறிகுறி என்றும் , மருத்துவ மொழியில் பராக்சிமல் சுப்ராவென்ட்ரிகுலர் டாக்கிகர்டியா என்ற பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும் வைத்தியர்கள் விவரிப்பார்கள். இதற்கு தற்போது நவீன சிகிச்சை முறைகள் அறிமுகமாகி பலன் அளித்து வருகிறது என்றும் வைத்தியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
மன அழுத்தம், பதட்டம், கோப்பி அருந்துவது, மது & புகைப்பிடித்தல் , உறக்கமின்மை, நீர்ச்சத்து குறைவு , எம்முடைய உடலுக்கு தேவையான எலெக்ட்ரோலைட் எனப்படும் சத்தில் ஏற்றத்தாழ்வு .. என பல்வேறு காரணங்களால் பராக்ஸிமல் சுப்ரா வென்ட்ரிகுலர் டாக்கிகர்டியா எனும் சீரற்ற இதய துடிப்பு பாதிப்பு ஏற்படுகிறது என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
மேலும் இதய துடிப்பு பாதிப்பு , மூச்சுத்திணறல், மார்பக பகுதியில் அசௌகரியங்கள், தலைச்சுற்றல், குமட்டல்.. ஆகிய அறிகுறிகளையும் இத்தகைய பாதிப்பு வெளிப்படுத்தும்.
அரித்மியா எனப்படும் அசாதாரணமான இதயத்துடிப்பு பாதிப்புகளில் பல வகைகள் உள்ளன. இத்தகைய பாதிப்பு உங்களது இதயத்தின் மேல் பகுதியில் தொடங்குகிறது. மேலும் இத்தகைய பாதிப்பு திடீரென்று தொடங்கி சில நிமிடங்கள் வரை கூட நீடிக்க கூடும். பொதுவாக உயிருக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாத இத்தகைய சீரற்ற இதயத்துடிப்பு பாதிப்பிற்கு உடனடியாக வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சையும், ஆலோசனையும் பெற வேண்டும்.
இத்தகைய தருணங்களில் வைத்தியர்கள் குருதி பரிசோதனை, இ சி ஜி பரிசோதனை, எக்கோகார்டியோ கிராம், சிடி ஓஞ்சியோகிராம், ஸ்ட்ரஸ் டெஸ்ட் ஆகிய பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள். இதனைத் தொடர்ந்து பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மற்றும் மின் தூண்டல் சிகிச்சை ஆகியவற்றை மேற்கொண்டு முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள்.
வைத்தியர் அசுதோஷ் குமார் தொகுப்பு அனுஷா.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM