நாவலப்பிட்டி பழைய ரயில் பாதைக்கு அருகில் அமைந்திருந்த ஒரு வீட்டின் மீது வெள்ளிக்கிழமை (28) ஆம் திகதி காலை ஏற்பட்ட மண் சரிவில், அந்த வீட்டில் வசித்த இரு பெண்களும் மற்றும் மூன்று மாதச் குழந்தையும் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழையால் அந்த வீட்டின் பின் பகுதியில் இருந்த மண்மேடு இடிந்து வீடு முழுவதையும் மூடி புதைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த கிராம மக்கள் மற்றும் நாவலப்பிட்டி பொலிஸ் அதிகாரிகள் இணைந்து குறித்த நபர்களை மீட்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் மூவரையும் காப்பாற்ற முடியவில்லை.
உயிரிழந்தோரின் உடல்கள் நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
நாவலப்பிட்டி பிரதேசத்தில் நிலவி வரும் மோசமான காலநிலை காரணமாக இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 50 குடும்பங்கள் பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு இடம்பெயர்த்துள்ளதாக பிரதேச செயலாளர் ரம்யா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM