( இராஜதுரை ஹஷான்)
மழையுடனான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கும், இடர் முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கும் மேலதிகமாக நிதி ஒதுக்க அரசாங்கம் குறைநிரப்பு பிரேரணையை கொண்டு வந்தால் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். அனர்த்தம் குறித்து விடுக்கப்படும் அறிவுறுத்தல்கள் தொடர்பில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும்,அலட்சியமாக செயற்பட கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாட்டு மக்களிடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற அமர்வின் போது நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையில் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உயிரிழப்புகள் மற்றும் காணாமல் போனோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிப்பற்கு பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தற்போதைய இடர் நிலைமை குறித்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் வானிலை ஆராய்ச்சி மையம் விடுக்கும் அறிவுறுத்தல்கள் தொடர்பில் பொதுமக்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும். அலட்சியமாக செயற்பட கூடாது.அரச அதிகாரிகள் விடுக்கும் அறிவுறுத்தலுக்கு அமைய செயற்பட வேண்டும்.
மழையுடனான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கும், இடர் முகாமைத்துவ நடவ டிக்கைகளுக்கும் மேலதிகமாக நிதி ஒதுக்க அரசாங்கம் குறைநிரப்பு பிரேரணையை கொண்டு வந்தால் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.
தற்போதைய நெருக்கடியான நிலையில் இருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இடர் நிலையில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM