நாடெங்கும் கடுமையான மழை மற்றும் வலுவான காற்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நிலவும் வானிலை அமைப்பின் தாக்கத்தினால், அடுத்த சில நாட்கள் நாடெங்கும் இடைவிடாமல் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சில இடங்களில் 200 மில்லிமீற்றருக்கும் மேலான மிக கனமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கொழும்பு மற்றும் பதுளை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் மேலான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனைய பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் மேலான கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
பொதுமக்கள் கடலோர பகுதிகளில், வெள்ள அபாயமுள்ள இடங்களில் மற்றும் மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பல ஆறுகள் பெருக்கெடுக்கும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்து சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
* மகாவலி கங்கை
* தெதுரு ஓயா
* மகா ஓயா
* கலா ஓயா
* மாணிக்க கங்கை
* மல்வத்து ஓயா
இடைவிடாது பெய்யும் மழையினால் மேற்குறிப்பிட்ட ஆறுகளின் நீர்மட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆறுகளுக்கருகே வசிக்கும் மக்கள் அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM