நெடுஞ்சாலை கட்டமைப்பு மேம்பாட்டில் பயிற்சி பெற்ற மனிதவளத்தின் முக்கியத்துவத்தை அரசாங்கம் அங்கீகரிக்கிறது - ஜனாதிபதி 

Published By: Vishnu

27 Nov, 2025 | 03:59 AM
image

பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட நெடுஞ்சாலை கட்டமைப்பை மேம்படுத்துவதில் பயிற்சி பெற்ற மனித வளங்களின் முக்கியத்துவத்தை அரசாங்கம் அங்கீகரிக்கிறது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் புதன்கிழமை (26) பிற்பகல் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றபோது ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கடந்த சில ஆண்டுகளில்  வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியதால், அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்துவதில் அரசாங்கம் பல சிக்கல்களை எதிர்கொண்டதாக தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் தொடர்ச்சியான பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை  பொறியியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக,  சட்டங்களில் உள்ள சிக்கல்கள் காரணமாக பல ஆண்டுகளாக தாமதமாகியுள்ள பொறியியல் துறை மற்றும்   வீதி அபிவிருத்தி அதிகாரசபை  பொறியியலாளர்களுக்கும் இடையிலான சம்பள முரண்பாடுகள், பதவி உயர்வுகள் குறித்து இதன் போது  கவனம் செலுத்தப்பட்டது. அதன்படி, இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியாக சாதகமான தீர்வுகளை வழங்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி நிதியமைச்சு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கபில சி.கே. பெரேரா, நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் ,  வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் டி. பாஸ்கரன், பணிப்பாளர் நாயகம் கே.டபிள்யூ. கண்டம்பி மற்றும்  வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியாளர்கள் குழு ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளரின் நடவடிக்கை குறித்து...

2026-02-11 17:20:23
news-image

தேர்ந்தெடுக்கப்பட்ட நீதி மற்றும் அரசியல் உள்நோக்கம்...

2026-02-11 19:01:22
news-image

இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை...

2026-02-11 15:22:48
news-image

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என உறுதியளித்தபோதிலும்,...

2026-02-11 18:46:10
news-image

மாகாணசபை தேர்தல் நடத்த அரசு தயக்கம்...

2026-02-11 17:28:08
news-image

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் :...

2026-02-11 18:43:13
news-image

சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும்...

2026-02-11 21:24:46
news-image

தட்டுப்பாடின்றி மருந்துகளை வழங்க வைத்தியசாலையில் மருந்துகள்...

2026-02-11 17:04:09
news-image

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: 4...

2026-02-11 19:26:14
news-image

2025 ஆம் ஆண்டில் சுமார் 2,355...

2026-02-11 17:01:17
news-image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி : தம்பதிகள்...

2026-02-11 16:15:32
news-image

ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்களை சந்தித்த சாணக்கியன்,...

2026-02-11 18:08:18