(எம்.மனோசித்ரா)
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவுக்கு லண்டனில் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பு திட்டமிட்டதாக இருக்கலாம். அல்லது ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் புலம்பெயர் இலங்கை தமிழர்களிடமிருந்து நிதியைப் பெற்ற போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமையால் ஏற்பட்ட அதிருப்தியின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாளர்கள் ஜே.வி.பி.யை எதிர்ப்பதாலேயே லண்டனில் டில்வின் சில்வாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக சிலர் கூறலாம். ஆனால் உண்மையில் அங்கு தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பு கொள்கை ரீதியிலானதல்ல.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நிதியைப் பெற்றுக் கொண்ட போது வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கூட இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம்.
தொல்பொருள் ஸ்தானங்களில் பெயர் பலகைகள் அகற்றப்பட்டதையும் மாவீரர் நினைவு தினத்தை தாம் விரும்பியவாறு அனுஷ்டிப்பதற்கு சுதந்திரமாக இடமளித்தை மறைப்பதற்காகவும் புலம்பெயர் இலங்கை தமிழர்கள் எமக்கும் எதிரானவர்கள் என்று காண்பிப்பதற்காகக் கூட இந்த ஆர்ப்பாட்டம் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என்றார்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM