புனர் ­வாழ்­வ­ளிக்­கப்­பட்ட புலி­கள் காரணமா.? ­ இரா­ணுவ தள­பதி

Published By: Robert

14 Aug, 2017 | 08:57 AM
image

Image result for மகேஷ் சேன­நா­யக்க virakesari

வடக்கில் இடம்­பெறும் அனைத்து அசம் ­பா­வி­தங்­க­ளுக்கும் புனர் ­வாழ்­வ­ளிக்­கப்­பட்ட புலி­களே கார­ண­மென்றதவ­றான அபிப்­பிரா­யத்தை தெற்கு மக்கள் மத்­தியில் கொண்டு செல்­கின்­றனர். அனைத்து விட­யங்­களுக் கும் விடு­தலை புலிகள் பேரை சொல்­வதை ஏற்க முடி­யாது.

 தெற்கில் வாழும் மக்கள் வடக்கில் என்ன நடப்­ப­தாக கேள்­விப்­ப­டு­கின்­றார்­களோ அதை அப்­ப­டியே நம்­பி­வி­டு­வ­தாக இரா­ணுவ தள­பதி லெப்­டினல் ஜெனரல் மகேஷ் சேன­நா­யக்க தெரி­வித்­துள்ளார்.

வடக்கில் இடம்­பெறும் குற்­றச்­செ­யல்கள் தொடர்பில் ஆங்­கில ஊட­க­மொன்­றுக்கு வழங்கிய செவ்­வி­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

ஆட்­சியை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கில் ஆங்­காங்கே எதேட்­சை­யாக நடக்கும் விட­யங்கள் தேசிய பாது­காப்­புக்கு என்றும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­விட முடி­யாது. சிலர் வடக்கில் இடம்­பெறும் அனைத்து விட­யங்­க­ளுக்கும் விடு­தலை புலி­களே காரணம் என கூறு­கின்­றனர். அனைத்து விட­யங்­க­ளுக்கு விடு­தலை புலிகள் பேரை சொல்­வதை ஏற்க முடி­யாது. சில சம்­ப­வங்­க­ளுக்கு விடு­தலை புலி­க­ளுடன் இல­கு­வாக இணைப்பை ஏற்­ப­டுத்­து­கின்­றனர். இது உண்­மைக்கு அப்­பாற்­பட்­டது. 

தற்­போது வடக்கில் உரு­வா­கி­ய­தாக கூறப்­படும் ஆவா குழுவினர் விடு­தலை புலிகள் அல்லர். மக்கள் தெற்கில் பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்­து­கின்­றனர். ஆனால் ஒரு குழுவை மாத்­திரம் இதற்­கெல்லாம் காரணம் என்று கூற முடி­யாது. இவர்­களை 1971 தொடக்கம் 1981 வரையில் அடை­யாளம் காணப்­பட்ட குழு­வாக நாம் கூறி­விட முடி­யாது. 

நாம் 12 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட முன்னாள் விடு­தலை புலி உறுப்­பி­னர்­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளித்­துள்ளோம் ஒரு சிலர் அவ்­வா­றன செயற்­பா­டு­களில் ஈடு­ப­டலாம். அதற்­காக ஒட்­டு­மொத்­த­மாக 12 ஆயிரம் பேரும் நாளைக் காலை எழுந்து துப்­பாக்­கியை ஏந்தி போர் செய்­கின்­றார்கள் என்று அர்­தப்­ப­டுத்­திக்­கொள்ள கூடாது. அனைத்து பிரச்­சி­னை­க­ளையும் விடு­தலை புலி­க­ளிடம் தொடர்பு படுத்­து­வதால் உண்­மை­யான பிரச்­சி­னையின் அடித்­த­ளத்தை விளங்­கிக்­கொள்ள முடி­யாது போய்­விடும். இதனை தேசிய பிரச்­சி­னை­யோடும் தொடர்­பு­ப­டுத்­து­கின்­றனர்.

கோப்­பாயில் இரண்டு பொலிஸ் வீரர்­களை தாக்­கிய சம்­ப­வத்தில் நாட்டின் சமா­தானம் சீர்­கு­லைந்­த­தாக வெளிப்­ப­டுத்­து­கின்­றனர். இது­போன்ற சம்­ப­வங்கள் தேசிய பிரச்­சி­னைக்கு பங்கம் விளை­விப்­ப­தாக அமைந்­து­வி­டாது. 

தெற்கில் உள்­ள­வர்கள் அவர்கள் என்ன காதில் கேட்­கி­றார்­களோ அதுவே உண்மை என நம்­பு­கி­றார்கள். வடக்கில் இடம்­பெறும் செயற்­பா­டு­க­ளையும் அவர்கள் அவ்­வாறே கரு­து­கின்­றார்கள். வடக்கில் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. நாம் மகாநாயக்க தேர்ர்களையும் வடக்கில் வந்து பார்க்குமாறு அழைப்பு விடுக்கின்றோம். அவர்கள் இம்மாதம் 28,29 ஆம் திகதிகள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளனர். அவர்கள் வடக்கில் என்ன நடைபெறுகின்றது என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38
news-image

நாராஹேன்பிட்டியில் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து

2025-03-20 17:44:18
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; 107...

2025-03-20 17:28:45