நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், நேற்று சனிக்கிழமை (23) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி, உடவலவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்தினபுரி - எம்பிலிப்பிட்டிய வீதியில் உள்ள தெமடகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எம்பிலிப்பிட்டியவிலிருந்து இரத்தினபுரி நோக்கிச் சென்ற கார் எதிர் திசையில் வந்த பஸ்ஸ_டன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் காரின் சாரதி பலத்த காயமடைந்து எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் 51 வயதுடைய படல்கும்புர - மூணகம பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
சடலம் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
உடவலவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாணந்துறை - களுத்துறை வீதியின் களுத்துறை வடக்கு பகுதியில், இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாணந்துறையிலிருந்து களுத்துறை நோக்கிச் சென்ற வேன், அதே திசையில் பயணித்த சைக்கிலுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது,
இதன்போது, விபத்தில் பலத்த காயமடைந்த சைக்கிளோட்டி நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
சடலம் நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM