இன, மத­வா­தத்­துக்கு அர­சாங்கம் ஒரு­போதும் அடி­ப­ணியக் கூடாது

23 Nov, 2025 | 02:17 PM
image

திரு­கோ­ண­மலை கடற்­கரைப் பகு­தியில் சட்ட விரோ­த­மான முறையில் பெளத்த வணக்­கஸ்­தலம் ஒன்றை அமைப்­ப­தற்கு எடுக்­கப்­பட்ட முயற்­சியும் அங்கு புத்தர் சிலை வைக்­கப்­பட்டு பொலி­ஸா­ரினால் அகற்­றப்­பட்டு   மீண்டும் வைக்கப்பட்ட விவ­கா­ரமும் சிங்­கள, பெளத்த தேசி­ய­வா­தத்தின் எழுச்­சியை பறை­சாற்­றி­யி­ருக்­கின்­றது.

இத­னை­விட, சிங்­கள தேசிய இன­வா­தத்தின் கோர முகத்­தையும் அது வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. அத்­துடன், பிர­தான சிங்­கள தேசியக் கட்­சி­களின் தலை­வர்­க­ளது இன­வாத முகத்­தையும் அது வெளிக்­காட்­டி­யுள்­ளது.

திரு­கோ­ண­மலை மாந­கர சபைக்கு சொந்­த­மான கடற்­ப­கு­தியில் ஏற்­கெ­னவே உள்ள அரச மரத்­துடன் இணைந்த புத்தர் சிலை கட்­டு­மா­னத்தை அண்­மித்து புதிய வணக்­கஸ்­தல கட்­டு­மான   வேலைகள் கடந்த 15 ஆம் திகதி சனிக்­கி­ழமை இரவு ஒரு குழு­வி­னரால் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. பெளத்த பிக்­கு­களின் அனு­ச­ர­ணை­யுடனேயே இந்த நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

இந்த விடயம் தொடர்பில் பல்­வேறு தரப்­பி­னரும் முறை­யிட்­ட­தை­ய­டுத்து, கரை­யோர பாது­காப்பு மற்றும் கரை­யோர மூல­வள திணைக்­கள அதி­கா­ரிகள் சம்­பவ இடத்தை பார்­வை­யிட்­ட­துடன் திரு­கோ­ண­மலை துறை­முக பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­தி­ருந்­தனர். இத­னை­ய­டுத்து சம்­பவ இடத்­துக்கு சென்ற பொலிஸார் பெளத்த வணக்­கஸ்­த­லத்­துக்­கான கட்­டு­மானப் பணி­களை தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­யி­ருந்­தனர்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு 8 மணி­ய­ளவில் திடீ­ரென அங்கு புத்தர் சிலை கொண்­டு­வ­ரப்­பட்டு வைக்­கப்­பட்­டது. சட்­ட­வி­ரோ­த­மான இந்த செயற்­பாடு தொடர்பில் முறைப்­பா­டுகள் தெரி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் வெளி­வி­வ­கார பிர­தி­ய­மைச்­ச­ரு­மான அருண் ஹேமச்­சந்­திரா உட்­பட்டோர் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டனர். இதற்­கி­ணங்க பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சர் ஆனந்த விஜே­பா­லவின் உத்­த­ர­வுக்­க­மைய புத்தர் சிலையை அகற்­று­வ­தற்கு பொலிஸார் நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தனர். இதற்கு பெளத்த பிக்­குகள் கடும் எதிர்ப்­பினை தெரி­வித்­தி­ருந்த போதிலும், அதனை மீறி பொலிஸார் அதனை அகற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தனர்.

சட்­ட­வி­ரோ­த­மாக பெளத்த வணக்­கஸ்­தலம் ஒன்றை அமைப்­ப­தற்கு எடுக்­கப்­பட்ட முயற்­சியும் அங்கு அனு­ம­தி­யின்றி புத்தர் சிலை வைக்­கப்­பட்­ட­மையும் தவ­றான செயற்­பா­டு­க­ளாகும். இத­னால்தான் அதனை அகற்­று­வ­தற்கு பொலிஸ் தரப்பில் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருந்­தது. அதற்­கான உத்­த­ரவும் பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சர் ஆனந்த விஜே­பா­ல­வினால் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. தேசிய மக்கள் சக்தி அர­சாங்­க­மா­னது இன, மத வேறு­பா­டு­களைக் கடந்து ஆட்சி நடத்­தப்­படும் என்று உறுதி வழங்­கி­யி­ருந்­தது. அதற்­கான முயற்­சி­க­ளையும் தற்­போ­தைய அர­சாங்கம் மேற்­கொண்டே வந்­தது. அதன் ஒரு ­ப­டி­யா­கவே அனு­ம­தி­யின்றி அமைக்­கப்­பட்ட பெளத்த மத ஸ்தாப­னமும் புத்தர் சிலையும் அகற்­றப்­பட்­டி­ருந்­தது.

அர­சாங்­கத்தின் இந்த செயற்­பாட்­டினை தமிழ்த் தேசிய அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள் உட்­பட பல்­வேறு தரப்­பி­னரும் வர­வேற்­றி­ருந்­தனர். இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இரா. சாணக்­கியன், புத்தர் சிலை அகற்­றப்­படும் ஒளிப்­ப­தி­வினை தனது சமூக வலை­­த­ளங்­களில் பகிர்ந்து பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சர் ஆனந்த விஜே­பா­ல­வுக்கு நன்­றி­யையும் தெரி­வித்­தி­ருந்தார்.

இதே­போன்றே பல தலை­வர்­களும் சிவில் சமூக அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­களும் அர­சாங்­கத்தின் இந்த செயற்­பாட்டை வர­வேற்­றி­ருந்­தனர்.

ஆனால் சிங்­கள, பெளத்த தேசி­ய­வாத அமைப்­புகள் இந்த விட­யத்­துக்கு கடும் எதிர்ப்பு தெரி­வித்­த­தை­ய­டுத்து தேசிய மக்கள் சக்தி அர­சாங்­க­மா­னது அதற்கு அடி­ப­ணிந்­தி­ருந்­தது. புத்தர் சிலை அகற்­றப்­பட்டு பதி­னைந்து மணி­நேரம் கழி­வ­தற்கு முன்­ன­ரேயே அந்த சிலையை மீளவும் அகற்­றப்­பட்ட அதே இடத்தில் வைப்­ப­தற்­கான உத்­த­ரவை அர­சாங்கம் பிறப்­பித்­தி­ருந்­தது. பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சர் ஆனந்த விஜே­பால இதற்­கான உத்­த­ரவை விடுத்­தி­ருந்தார். இதற்­கி­ணங்க திரு­கோ­ண­மலை செய­ல­கத்தில் அர­சாங்க அதிபர் தலை­மையில் விசேட மாநாடு நடத்­தப்­பட்டு, மீளவும் அகற்­றப்­பட்ட புத்தர் சிலையை அதே இடத்தில் வைப்­ப­தற்­கான நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டது. அகற்­றிய பொலி­ஸாரே அந்த புத்தர் சிலையை எடுத்துச் சென்று  அதே இடத்தில் வைத்து சமய வழி­பா­டு­களில் ஈடு­பட்­டனர்.

சட்­ட­வி­ரோ­த­மாக அனு­ம­தி­யின்றி வைக்­கப்­பட்ட புத்தர் சிலையை அகற்­றிய அர­சாங்கம், சிங்­கள, பெளத்த தேசி­ய­வாத சக்­தி­க­ளுக்கு அடி­ப­ணிந்து அதனை மீளவும் அகற்­றப்­பட்ட இடத்தில் பிர­திஷ்டை செய்­த­மை­யா­னது ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க நட­வ­டிக்கை அல்ல.

சட்டம் சகல மதங்­க­ளுக்கும் சகல இனங்­க­ளுக்கும் சம­மா­னது. அதில் பெளத்­த மதத்­துக்கு முன்­னு­ரிமை, ஏனைய மதங்­க­ளுக்கு பின்­னு­ரிமை என்ற கருத்து ஏற்­றுக்­கொள்ள முடி­யா­த­தாகும். சட்டம் சக­ல­ருக்கும் சம­மாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

இந்த விட­யத்தில் தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கத்தின் செயற்­பா­டா­னது சிங்­கள, பெளத்த தேசி­ய­வாத கட்­சிகள் அனைத்­துமே ஒரே குட்­டையில் ஊறிய மட்­டைகள் என்­பதை பறை­சாற்­று­வ­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது.

பெளத்த, சிங்­கள தேசி­ய­வா­தத்­துக்கும் இன­வா­தத்­துக்கும் பயந்து நடுங்கும் அர­சாங்­க­மா­கவே தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கமும் இன்று வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

அர­சாங்­கத்தின் செயற்­பாடு இவ்­வா­றி­ருக்­கையில், புத்தர் சிலை அகற்­றப்­பட்ட விவ­கா­ரத்தை இன­வாத நோக்­கோடு சிங்­கள தலை­மைகள் உட­ன­டி­யா­கவே அணு­கிய முறை­மை­யா­னது நாட்டில் தேசிய நல்­லி­ணக்கம் என்­பது தற்­போ­தைக்கு சாத்­தி­ய­மற்­றது என்­பதை எடுத்­துக்­காட்­டு­வ­தா­கவே அமைந்­தி­ருந்­தது. புத்தர் சிலை அகற்­றப்­பட்­ட­தை­ய­டுத்து, பாரா­ளு­மன்­றத்தில் கடந்த திங்­கட்­கி­ழமை அந்த விடயம் பெரும் சர்ச்­சையை கிளப்­பி­யி­ருந்­தது. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தயா­சிறி ஜய­சே­கர இந்த விட­யத்தை சபையின் கவ­னத்­துக்கு கொண்­டு­வந்தார்.

பெளத்த பிக்­குகள் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்டு, புத்தர் சிலை எடுத்துச் செல்­லப்­பட்­டமை தவ­றான செயற்­பாடு என்று விசனம் தெரி­வித்த தயா­சிறி ஜய­சே­கர எம்.பி., அமைச்சர் ஒரு­வரின் உத்­த­ர­வுக்­க­மை­யவே பொலி­ஸாரால் பிக்­குகள் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

இந்த விவ­காரம் தொடர்பில் ஐக்­கிய மக்கள் சக்­தியின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான சஜித் பிரே­ம­தாச, இன­வா­தத்தைத் தூண்டும் வகையில் கருத்து தெரி­வித்­தி­ருந்­தமை சிறு­பான்­மை­யின மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் பெரும் ஏமாற்­றத்தை அளித்­தி­ருந்­தது.

“திரு­கோ­ண­மலை சம்­புத்­த­ ஜ­யந்தி போதி­ராஜ விகா­ரையில் பெளத்த மதத்­துடன் தொடர்­பு­டைய சகல பணி­க­ளையும் முன்­னெ­டுக்கும் சுதந்­திரம், உரிமை தேரர்கள் உள்­ளிட்ட நிர்­வாக சபை­யி­ன­ருக்கு உள்­ளது. அதில் தலை­யிட எவ­ருக்கும் உரிமை கிடை­யாது. எனவே, தற்­போது ஏற்­பட்­டுள்ள நிலை­மையை சீராக்க உட­ன­டி­யாக ஜனா­தி­பதி நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்” என்று சஜித் பிரே­ம­தாச வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். பெளத்த மதத்­துக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்­டி­ருந்தார்.

இதே­போன்றே “சிங்­கள, பெளத்த கோட்­பாடு உள்ள நாட்டில் சிறு­பான்மை என்ற குழுக்கள் இருக்­க ­வாய்ப்­பில்லை. பெளத்தம் இன­வா­தத்தை முழு­மை­யாக நிரா­க­ரிக்கும் கொள்­கையைக் கொண்­டது. இந்த அர­சாங்கம் இல்­லாத இன­வா­தத்தை இருப்­ப­தாகக் குறிப்­பிட்டு இனங்­களை வேறு­ப­டுத்தி முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது” என்று பாரா­ளு­மன்­றத்தில் சர்­வ­ஜன சக்­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் திலித் ஜய­வீர தெரி­வித்­தி­ருந்தார்.

இதே­போன்றே சிங்­கள, பெளத்த தேசி­ய­வாத தலை­வர்கள் பலரும் புத்தர் சிலை அகற்­றப்­பட்ட விவ­கா­ர­மா­னது பெளத்­தத்­துக்கே பேரா­பத்­தாக அமைந்து விட்­டது என்ற சாரப்­பட கருத்­துக்­களை தெரி­வித்­தி­ருந்­தனர்.

பாரா­ளு­மன்­றத்தில் கருத்து தெரி­வித்த நீதி­ய­மைச்சர் ஹர்­சன நாண­யக்­கார, திரு­கோ­ண­மலை புத்தர் சிலை விவ­காரம் குறித்து சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று குறிப்பிட்டிருந்தார். பாராளுமன்றத்தில் கருத்துரைத்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, புத்தர் சிலைக்கு ஆபத்து வந்து விடக் கூடாது என்பதற்காகவே அதனை அவ்விடத்தில் இருந்து அகற்றியதாகவும் அதே இடத்தில் அதனை வைப்பதற்கு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு புத்தர் சிலை அகற்றப்பட்ட விவகாரத்தை வைத்து இனவாதத்தை மீண்டும் தூண்டும் செயற்பாட்டில் சிங்கள, பெளத்த தேசியவாத சக்திகள் ஈடுபட்டிருந்தனர். அதற்கு அடிபணிந்து அரசாங்கமும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. இந்த விடயமானது சிறுபான்மையின மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கின்றது. கடந்த கால கறைபடிந்த வரலாற்றையும் மீட்டிப் பார்க்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.

எனவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் அடிபணியாது, ஆட்சியை முன்னெடுக்க வேண்டும் என்று சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இதயசுத்தியான செயற்பாடு தேவை

2025-11-30 10:32:53
news-image

இன, மத­வா­தத்­துக்கு அர­சாங்கம் ஒரு­போதும் அடி­ப­ணியக்...

2025-11-23 14:17:58
news-image

அடிப்படைத் தீர்வையாவது பெறுவதற்கு முயலவேண்டும்

2025-11-09 16:18:30
news-image

அரசியல்தீர்வு விடயத்தில் அக்கறைகொள்ள வேண்டும்

2025-11-02 14:47:15
news-image

தமிழ்த் தேசியக் கட்சிகள் யதார்த்தத்தை உணர...

2025-10-26 14:09:27
news-image

பொறுப்புக்கூறலில் அரசாங்கம் கடப்பாட்டை உணரவேண்டும்

2025-10-12 11:56:26
news-image

சோமரத்னவின் சாட்சியத்தை பெறவேண்டியதன் அவசியம்

2025-10-05 16:41:36
news-image

அரசியல் தீர்வுக்கான பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டியதன்...

2025-09-28 16:36:03
news-image

ஒன்றிணைவதன் மூலம் உரிய தீர்வை காணலாம்

2025-09-21 12:11:27
news-image

அரசியல்தீர்வு விடயத்தில் இந்தியாவின் மென்போக்கு

2025-09-14 11:25:36
news-image

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்புடன்...

2025-08-31 12:08:27
news-image

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை இனியாவது பூர்த்தி...

2025-08-24 10:43:58