மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் நாளை வெள்ளிக்கிழமை (21) பிற்பகல் பொதுக்கூட்டம் நடைபெறவிருப்பதால் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரமுகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பிரதிநிதிகள், கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை பிற்பகல் 2.00 மணி முதல் பொதுக்கூட்டம் முடியும் வரை, நுகேகொடை மேம்பாலம் அருகே உள்ள ஹைலெவல் சந்திப்பிலிருந்து நாவல சுற்றுவட்டம் (ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கிற்கு எதிரே உள்ள வீதி) வரை நாவல வீதியூடான வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த காலப்பகுதியில், வீதிகளைப் பயன்படுத்தும் ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க, மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதற்கமைய, பயன்படுத்தக்கூடிய மாற்று வழிகள்
கொழும்பு மற்றும் கொஹூவலயிலிருந்து, நுகேகொட வழியாக நாவல மற்றும் புறக்கோட்டை நோக்கி பயணிக்கும் வாகனங்கள், கம்சபா சந்தியிலிருந்து இடதுபுறம் திரும்பி, ஹைலெவல் வீதியில் கட்டிய சந்தி வழியாக மிரிஹான மற்றும் நாவல நோக்கிச் செல்லமுடியும்.
புறக்கோட்டை மற்றும் நாவலயிலிருந்து நுகேகொட வழியாக ஹைலெவல் வீதி நோக்கி பயணிக்கும் வாகனங்கள் நாவல சுற்றுவட்டத்திலிருந்து கம்சபா சந்தி வரையும், தெல்கந்த சந்தியிலிருந்து ஹைலெவல் வீதி வரையும் பயணிக்க முடியும்.
மஹரகமவிலிருந்து ஹைலெவல் வீதியில் நுகேகொட நோக்கி பயணிக்கும் வாகனங்கள் கம்சபா சந்தியிலிருந்து கட்டிய சந்தி வழியாக தெற்கு நோக்கி பயணிக்க முடியும்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM