வியட்நாமில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவின்போது பயணிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த பஸ் மீது பாறைகள் வீழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்ததோடு 19 பேர் படுகாயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) இரவு வேளையில் வியட்நாமின் ஹோ சி மின் நகரிலிருந்து கான் லே மாகாணத்தில் கணவாயருகில் 32 பயணிகளுடன் பஸ் சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட மண்சரிவில், பஸ் மீது பாறைகள் விழுந்துள்ளன.
பாறைகள் விழுந்ததில் பஸ்ஸின் முன்பகுதி நசுங்கி பலத்த சேதமடைந்துள்ளது.
மழை தொடர்ந்து பெய்ததால் கணவாயின் இருபுறமும் மண்சரிவுகள் ஏற்பட்டதோடு, அப்பகுதியில் போக்குவரத்தும் தடைப்பட்டது.
இதனால் பல மணிநேரம் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்றடைய முடியாமல் இருந்துள்ளனர்.
இந்நிலையில், நள்ளிரவுக்குப் பின்னரே மீட்புப் பணியினர் குறித்த பகுதிக்கு சென்று மண்சரிவில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அத்தோடு, உயிரிழந்தவர்களின் உடல்களையும் கண்டெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM