50,000 பட்டதாரி வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் ; அரசின் வாக்குறுதி மீறல் குறித்து சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

18 Nov, 2025 | 10:00 AM
image

தேர்தல் காலத்தில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி, வேலையில்லாப் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி அவர்களது வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், தற்போது அவர்களுக்கு தொழிலைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையை கைவிடும் நிலைக்கு வந்துள்ளது.

பிரதமர் முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்தின்படி, நாட்டில் தற்போது சுமார் 50,000 பட்டதாரி தொழில் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. ஆகவே,  இவர்களுக்கு உரிய நீதியைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் தமக்கு தொழில் பெற்றுத் தருமாறு கோரி அமைதி வழியிலான போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்ட இடத்துக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தார். பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தற்போதைய அரசாங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் 35,000 தொழில் வாய்ப்புகளை எவ்வாறு பெற்றுத் தருவோம்  என்பதை விரிவாக விளக்கியிருந்தது. ஆனால் இன்று அவை அனைத்தையும் மறந்துவிட்டு செயற்பட்டு வருகிறது.

இவ்வாறு இந்த ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நிரந்தரமாக உள்ளீர்த்துக் கொள்ளாமல் இருப்பது நியாயமற்ற செயலாகும் என்பதால், பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பல சந்தர்ப்பங்களில் நான் இது தொடர்பில் பேசி இருக்கிறேன். இவர்களின் உரிமைகளுக்காக தான் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வங்குரோத்தடைந்த அரசியல்வாதிகள் நாட்டில் மீண்டும் இனவாதம்,...

2026-02-18 18:20:34
news-image

தமிழ்த் அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரிட்டன்...

2026-02-18 18:14:01
news-image

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்த...

2026-02-18 18:15:46
news-image

அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மின் நுகர்வோருக்காக...

2026-02-18 17:54:08
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு திருகோணமலை...

2026-02-18 17:18:51
news-image

வத்தளையில் 9,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றல்

2026-02-18 17:16:06
news-image

குடும்ப தகராறு ; பிரிந்து வாழும்...

2026-02-18 16:56:26
news-image

மொட்டு கட்சியுடன் "மக்கள் குரல்" சந்திப்பு!

2026-02-18 16:50:14
news-image

மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்:...

2026-02-18 16:29:50
news-image

அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் விளக்கமறியலில்!

2026-02-18 16:08:54
news-image

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை!

2026-02-18 15:28:45
news-image

வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு...

2026-02-18 15:20:37