ராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிகள் றொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரை விடுவிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக் கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், றொபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயக்குமார், றொபர்ட் பயஸ் ஆகியோர் கடந்த 2012 ஆம் ஆண்டு தங்களை விடுவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு, கடந்த ஜனவரி மாதம் விசாரணைக்கு வந்தபோது, தற்போதைய நிலைகுறித்து மத்திய, மாநில அரசுகள் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஜெயக்குமார், றொபர்ட் பயஸை விடுவிக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சகம் பதில் மனுத்தாக்கல் செய்தது. ஆயுள் தண்டனை என்பதே வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டும் என்பதுதான். எனவே ஜெயக்குமார் மற்றும் றொபர்ட் பயஸ் ஆகியோர் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டியது தான் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கை எதிர்வரும் 14ஆம் திகதி உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM