கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து சாரதியை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் எஸ். சிவபால சுப்பிரமணியம் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது நேற்று குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவது,
ஏ-9 வீதியில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சொகுசு பஸ் ஒன்று கடந்த 4 ஆம் திகதி அதிகாலை 2.30 மணியளவில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவத்தின் போது மின்கம்பங்கள், தொலைத்தொடர்பு கம்பங்கள், கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகம் என்பன சேதமாக்கப்பட்டதுடன், பேருந்தில் பயணித்த நான்கு பேர் காயமடைந்திருந்தனர்.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் கிளிநொச்சிப் பொலிஸார் குறித்த பஸ்ஸின் சாரதியை கைதுசெய்து வழக்குப்பதிவு செய்துடன் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், விளக்கமறியலில் உள்ள சாரதியை நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து எதிர்வரும் 14 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM