லொறியை திருடிச் சென்ற நபரால் நேர்ந்த விபத்துக்கள் ; ஒருவர் பலி ; நால்வர் காயம்

Published By: Digital Desk 1

16 Nov, 2025 | 11:27 AM
image

கந்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த 15 ஆம் திகதி லொறியை திருடிச் சென்ற நபரால் இரண்டு விபத்து சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது. விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு,   நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸால் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது

கடந்த 15 ஆம் திகதி கந்தானை , மரியா மாவத்தையில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் லொறி ஒன்று  திருடப்பட்டது. இதனை அடுத்து லொறியின் உரிமையாளரும் மற்றும் அவரது ஊழியர்களும் சேர்ந்து வாகனத்தை பின்தொடர்ந்தனர். சந்தேக நபர் லொறியை நிறுத்தாமல் படகம் நோக்கி ஓட்டிச் சென்றுள்ளார்.

இதன்போது, சந்தேகநபர் எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் காயமடைந்தனர். அதனை தொடர்ந்து மற்றுமொரு மோட்டார் சைக்கிளை மோதியதில் இருவர் காயமடைந்தனர்.

அதன் பின்னர் லொறி சுவர் மீது மோதி கழிந்தது.

இரண்டாவது விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற கம்பஹாவைச் சேர்ந்த 43 வயதுடைய நபர், ராகம வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். காயமடைந்த மற்றைய இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொது மக்கள் சந்தேக நபரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். 

ஜா-எலவைச் சேர்ந்த 46 வயதுடைய சந்தேகநபர், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த...

2025-12-15 00:42:07
news-image

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் விசேட அறிக்கை

2025-12-14 20:53:23
news-image

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமி...

2025-12-14 22:49:10
news-image

அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காக இலங்கை வந்த...

2025-12-14 22:04:01
news-image

கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறப்பு

2025-12-14 19:41:06
news-image

அரசாங்கத்தின் பங்களிப்பில் கல்வி பயின்று, பாராட்டுப்...

2025-12-14 19:51:08
news-image

இந்த நேரத்தில் கல்வி மாணவர்களுக்குச் சுமையாக...

2025-12-14 17:12:00
news-image

யாழில். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின்...

2025-12-14 17:13:55
news-image

நாட்டிலிருந்து புறப்பட்டது அமெரிக்க குழு

2025-12-14 17:12:45
news-image

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி...

2025-12-14 16:09:36
news-image

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைந்து...

2025-12-14 16:09:19
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் தீப்பிடித்து...

2025-12-14 15:32:01