கந்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த 15 ஆம் திகதி லொறியை திருடிச் சென்ற நபரால் இரண்டு விபத்து சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது. விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸால் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
கடந்த 15 ஆம் திகதி கந்தானை , மரியா மாவத்தையில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் லொறி ஒன்று திருடப்பட்டது. இதனை அடுத்து லொறியின் உரிமையாளரும் மற்றும் அவரது ஊழியர்களும் சேர்ந்து வாகனத்தை பின்தொடர்ந்தனர். சந்தேக நபர் லொறியை நிறுத்தாமல் படகம் நோக்கி ஓட்டிச் சென்றுள்ளார்.
இதன்போது, சந்தேகநபர் எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் காயமடைந்தனர். அதனை தொடர்ந்து மற்றுமொரு மோட்டார் சைக்கிளை மோதியதில் இருவர் காயமடைந்தனர்.
அதன் பின்னர் லொறி சுவர் மீது மோதி கழிந்தது.
இரண்டாவது விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற கம்பஹாவைச் சேர்ந்த 43 வயதுடைய நபர், ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். காயமடைந்த மற்றைய இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொது மக்கள் சந்தேக நபரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
ஜா-எலவைச் சேர்ந்த 46 வயதுடைய சந்தேகநபர், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM