மெட்ராஸ் மாஃபியா கம்பனி - திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : அண்ணா புரொடக்ஷன்ஸ்
நடிகர்கள் : ஆனந்தராஜ், சம்யுக்தா, தீபா, சசிலயா, ராம் தாஸ் , ஆராத்யா மற்றும் பலர்.
இயக்கம் : ஏ. எஸ். முகுந்தன்
மதிப்பீடு : 2/5
வில்லனாக அறிமுகமாகி பிரபலமான நடிகர் ஆனந்தராஜ் அண்மைக்காலமாக நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் 'மெட்ராஸ் மாஃபியா கம்பனி'. இப்படத்தின் பெயரில் இருக்கும் வித்தியாசம் படத்திலும் இருந்ததா ? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
சென்னை முழுவதும் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு ரவுடியை தன்னுடைய பிரதிநிதியாக நியமித்து மாமூல் வசூல் செய்வதுடன் சட்டவிரோத குற்ற செயல்களில் ஈடுபட்டு வருபவர் பூங்காவனம் (ஆனந்தராஜ்) . இவர் அனைத்து வகையினதான குற்ற செயல்களை செய்தாலும் காவல்துறையின் பதிவேட்டில் இவருடைய பெயரோ.. புகைப்படமோ இருக்காது.
அந்த அளவிற்கு காவல்துறையின் ஆதரவையும், அதன் நுணுக்கங்களையும் தெரிந்து கொண்டு தொடர்ந்து யாராலும் வீழ்த்த இயலாத ரவுடியாக திகழ்கிறார் பூங்காவனம்.
இவரது பலவீனங்களை பயன்படுத்தி ஏதேனும் பழைய குற்ற சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்களை திரட்டி அவர் மீது குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்து கைது செய்ய வேண்டும் என விரும்பும் காவல்துறை - தனிப்படை அமைத்து அதற்கு திகழ் பாரதி ( சம்யுக்தா) எனும் பெண் காவல்துறை உயரதிகாரியை நியமிக்கிறது.
இவர் தனது தலைமையின் கீழ் மூன்று காவலர்களை வைத்துக்கொண்டு பூங்காவனத்தை துல்லியமாக அவதானித்து ஆதாரங்களை திரட்டி கைது செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்.
இந்நிலையில் தொழில் போட்டி காரணமாக பூங்காவனத்தை கொலை செய்ய வேண்டும் என அவருடைய போட்டியாளர்களும் திட்டமிடுகிறார்கள். இவர்களின் வலையில் சிக்காமல் பூங்காவனம் தப்பித்தாரா? இல்லை சிக்கினாரா ? என்பது தான் இப்படத்தின் கதை.
பூங்காவனமாக நடித்திருக்கும் ஆனந்தராஜ் வாய்ப்பு கிடைக்கும் போது வில்லனாகவும், ஏனைய தருணங்களில் சிரிக்க வைக்கும் நகைச்சுவை நடிகராகவும் கலந்து கட்டி நடித்து அந்த கதாபாத்திரத்தை செதுக்கியிருக்கிறார். இதனால் சில இடங்களில் எரிச்சலும், சில இடங்களில் லேசாக சிரிப்பும் வருகிறது.
காவல்துறை அதிகாரி திகழ் பாரதியாக நடித்திருக்கும் நடிகை சம்யுக்தா- சீருடையில் கம்பீரமாக இருந்தாலும் காட்சிகளில் இயல்பான அளவை விட கூடுதலாக நடித்து ரசிகர்களை சோதிக்கிறார். ஆனால் ஆக்சன் காட்சிகளில் அதகளம் செய்கிறார்.
கொண்டித் தோப்பு வரதன் இடம் ரவுடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் முனிஸ்காந்த் சிரிப்பை வரவழைக்க போராடுகிறார். அதற்கு அவருடைய உடல் மொழியும், உச்சரிப்பும் ஒத்துழைக்கவில்லை.
ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும் இது குறைந்த முதலீட்டு திரைப்படம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தங்களுடைய பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள்.
தயாரிப்பாளரின் கதை என்பதால் இயக்குநர் தம்மால் முடிந்த அளவிற்கு வணிகத்தனம் கலந்த படைப்பாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அதில் அவர் பாதி கிணறு கூட தாண்டவில்லை.
மெட்ராஸ் மாஃபியா கம்பனி - தரமான முத்திரை - போலியான சரக்கு.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM