எதிரணியை பெருந்தோட்ட மக்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும் பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன வலியுறுத்தல்

14 Nov, 2025 | 05:02 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

மலையக மக்களின் சம்பள விவகாரத்தை முன்னிலைப்படுத்தி இதுவரை காலமும் செய்த அரசியல் முடிவடைவதை  எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் விரும்பவில்லை. இதனால் தான்  200 ரூபா சம்பள அதிகரிப்பை எதிர்க்கிறார்கள். எதிர்க்கட்சியின் உறுப்பினர்களின் கருத்தை பெருந்தோட்ட மக்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று  ஊடகத்துறை பிரதி அமைச்சர்  கௌசல்யா ஆரியரத்ன  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற  2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான  ஆறாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டிய பொறுப்பு சகல தரப்பினருக்கும் உண்டு. வரவு செலவுத் திட்டத்தில் மலையக மக்களுக்கு 200 ரூபா சம்பளம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதை  எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சவாலுக்குட்படுத்துகிறார்கள்.

மலையக மக்களின் சம்பள விவகாரத்தை முன்னிலைப்படுத்தி இதுவரை காலமும் செய்த அரசியல் முடிவடைவதை  எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் விரும்பவில்லை. இதனால் தான் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எதிர்க்கிறார்கள்.

இந்த சம்பள அதிகரிப்பு பற்றி எதிர்க்கட்சித் தலைவர்  இன்று (நேற்று) பாராளுமன்றத்தில்  விசேட உரையாற்றினார். இந்த சம்பள அதிகரிப்புக்கு தாம் எதிர்ப்பு இல்லை என்றார். எதிர்க்கட்சியின் முறையற்ற கருத்துக்களைத் தொடர்ந்து  பெருந்தோட்ட மக்கள் எதிர்க்கட்சியின் உறுப்பினர்களுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள். கோயிலில் பூஜை செய்து, தேங்காய் உடைத்தார்கள். நேர்த்தி வைத்தார்கள் இதற்கு அச்சமடைந்து எதிர்க்கட்சியின் உறுப்பினர் இவ்வாறு கருத்து தெரிவித்தாரா ?என்பது தெரியவில்லை.

பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம். இந்த சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் ஒருமித்த நிலைப்பாடு இல்லை என்பது தெளிவாக விளங்குகிறது.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் எவரையும் ஜனாதிபதி புறக்கணிக்கவில்லை.  பொருளாதாரத்துக்கு  பாதிப்பு ஏற்படாத வகையில் நிதி நிலைமையை ஸ்திரப்படுத்திக் கொண்டு வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிணையில் விடுதலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

2025-12-15 10:42:22
news-image

மண்சரிவால் பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி - கண்டி...

2025-12-15 10:30:40
news-image

மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் உள்ள கற்களை...

2025-12-15 10:23:59
news-image

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில்...

2025-12-15 09:57:31
news-image

கொழும்பு துறைமுகத்தில் மசகு எண்ணெய் கசிவு...

2025-12-15 09:51:43
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது!

2025-12-15 08:59:20
news-image

புதையல் தோண்டிய 06 பேர் கைது!

2025-12-15 09:19:43
news-image

அம்பலாங்கொடை முகத்துவார தேவாலயக் குழுத் தலைவர்...

2025-12-15 09:14:07
news-image

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

2025-12-15 09:19:00
news-image

நாளை முதல் நாடு முழுவதிலும் மழையுடனான...

2025-12-15 06:09:10
news-image

அனர்த்த நிவாரண விடயங்களில் ஜனாதிபதியின் கருத்துகளில்...

2025-12-15 03:54:13
news-image

கிழக்கு அலை வடிவ காற்றழுத்த தாக்கம்...

2025-12-15 03:51:43