இந்தியாவின் 70 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகம் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.
இந்திய சுதந்திர தினத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவையும், நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மஹோற்சவத்தையும் முன்னிட்டு இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு நாளை 12 ஆம் திகதி ஸ்ரீதேவி நடித்த 'மம்' திரைப்படம் ராஜா திரையரங்கில் பிற்பகல் 2.30 க்கு திரையிடப்படவுள்ளது. இவற்றிற்கான நுழைவுச்சீட்டுக்கள் இலவசம்.
எதிர்வரும் 16 ஆம் திகதி சங்கிலியன் தோப்பில் பெங்களுரைச் சேர்ந்த மஞ்சுநாத் சகோதர்களின் வயலின் இசைக்கச்சேரியை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 17 ஆம் திகதி மஞ்சுநாத் சகோதர்களின் வயலின் இசைக்கச்சேரியும் பயிற்சிப் பட்டறையும், வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கல்யாண மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
நாளை முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நல்லூர் சுகாதார பணிமனையில் தொடர் புத்தக கண்காட்சி இடம்பெறவுள்ளது. இதில் இலங்கை, இந்திய பதிப்பகங்கள் பங்கேற்பதாக துணை உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM