வடக்கு மாகாண விளையாட்டுத்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டிலும் முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுத்துறை பிரிவின் ஒழுங்கமைப்பிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு நாள் மல்யுத்த பயிற்சி நெறி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.




வடக்கு மாகாண விளையாட்டுத்துறை திணைக்களத்தின் குறித்தொதுக்கபட்ட (PSDG) நிதி ஒதுக்கீட்டில் நடத்தப்பட்ட
இந்த மல்யுத்த பயிற்சி நெறியில் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 60 வீர, வீராங்கனைகள் கலந்து கொண்டனர். முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து மாத்திரம் 50 வீர, வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
துரதிர்ஷ்டவசமாக இந்த பயிற்சி நெறியில் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து எவரும் பங்குபற்றவில்லை.




இந்த பயிற்சி நெறியை தேசிய மல்யுத்த பயிற்றுநர்கள் வீ. திருச்செல்வம் (மட்டக்களப்பு), என். நிஷேத் ஆகியோர் நடத்தினர்.
முல்லைத்தீவு மாவட்ட உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்தப் பயிற்சி நெறியை முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ஏ. உமாமகேஸ்வரன், வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சன் ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.
ஆரம்ப நிகழ்வில் மேலதிக அரச அதிபர் எஸ். மஞ்சுளாதேவி, விளையாட்டுத்துறை திணைக்களத்தின் சிரேஷ்ட மாவட்ட தலைமைப்பீட விளையாட்டுத்துறை அலுவலர் எஸ். சதானந்தன், முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள், பயிற்றுநர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
(என்.வீ.ஏ.)











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM